Homeசெய்திகள்தமிழ்நாடுமாநாட்டை புறக்கணித்து "நானே ராஜா" என்று சூட்டிக்கொண்ட  மகுடம் கீழே இறக்கிய துணைவேந்தர்கள்!

மாநாட்டை புறக்கணித்து “நானே ராஜா” என்று சூட்டிக்கொண்ட  மகுடம் கீழே இறக்கிய துணைவேந்தர்கள்!

-

- Advertisement -

“அதிகாரம் பறிக்கப்பட்டாலும் நான் இன்னும் வேந்தராகவே இருக்கிறேன் என்று காட்டிக் கொள்வதற்காக தமிழ்நாடு ஆளுநர் கூட்டிய துணைவேந்தர்கள் மாநாட்டை 32 துணை வேந்தர்கள் புறக்கணித்து விட்டார்கள்.மாநாட்டை புறக்கணித்து "நானே ராஜா" என்று சூட்டிக்கொண்ட  மகுடம் கீழே இறக்கிய துணைவேந்தர்கள்!இதுவரை திராவிட மாடல் அரசுடன் நேரடி மோதலில் ஈடுபட்டு வந்த ஆளுநர் இப்போது “இந்த மாநாடு அரசுக்கு எதிரானது அல்ல” என்று அறிக்கை விடுகின்ற நிலைக்கு தள்ளப்பட்டார். ஆனாலும் அவர் தலைமை தாங்க அழைத்த  குடியரசு துனைத் தலைவர்  பகிரங்கமாக உச்சநீதிமன்ற தீர்ப்பை சாடினார்.”நாடாளுமன்றத்தின் உரிமையை உச்சநீதிமன்றம் பறித்து ஏவுகணை வீசிவிட்டது” என்று பேசினார். அவரைத் தேடிப் பிடித்து இந்த மாநாட்டுக்கு தலைமை தாங்க ஆளுநர் அழைத்து அரசுக்கு எதிரான போராட்டம் என்பதை காட்டிக்கொண்டார்.

உண்மையில் உச்ச நீதிமன்றத்தின்  தீர்ப்பு மக்கள் மன்றமான சட்டமன்றத்தின் உரிமையை பாதுகாத்திருக்கிறது.  மக்கள் மன்றத்தின் உரிமையை பறித்தது ஆளுநர்தான். பல்கலைக்கழக வேந்தர் என்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி தமிழ்நாட்டின் உயர்கல்வியை சீர்குலைத்தவர் ஆளுநர் ஆர்.என்.ரவி.

தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பட்டங்கள் பெற முடியாமல் அவர்களது எதிர்காலத்தை இருளில் தள்ளியவர். கிரிமினல் வழக்குகளில் சிக்கிய பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தரை காப்பாற்றியவர்.  12 பல்கலைக் கழகங்களில் துணை வேந்தர்கள் இல்லாத காரணத்தினால் பல அறிவியல் பட்டப்படிப்புகளை திட்டமிட்டபடி தொடங்க முடியவில்லை. அவர்தான் இப்போது “கல்வியை அறிவியல் ஆக்குவது எப்படி?என்பதற்காக மாநாடு நடத்துகிறோம்”என்று காதில் பூசுற்றுகிறார்.

ஆளுநரின் இந்த மோதல் முயற்சிகளை தமிழக முதலமைச்சர் புறம் தள்ளியது மிகச் சிறப்பான முடிவு. “மாநாட்டில் பங்கேற்க வேண்டாம்” என்று எந்த அறிவிப்பையும் தமிழ்நாடு அரசு வெளியிடவில்லை.

“As soon as possible” என்ற சட்டத்தின் வாசகத்தை “As long as possible” என்று  அப்பட்டமாகத்திரித்து நாடகமாடிய சனாதனக் காவலரை திருத்தி இருக்கிறது உச்சநீதிமன்ற தீர்ப்பு.  இது சட்ட பிரிவின் நோக்கத்திற்கு வெளிச்சம் காட்டும் தீர்ப்பே தவிர சட்டத்தை மாற்றி அமைக்கும் தீர்ப்பல்ல.

” சட்டத்தையே உச்சநீதிமன்றம் மாற்றிவிட்டது என்றும் அதற்கு உச்சநீதிமன்றத்திற்கு உரிமை இல்லை” என்றும் சங்கிகள் விடும் கதைகள் அர்த்தமற்றவை. வேந்தர் “நானே ராஜா” என்று சூட்டிக்கொண்ட  மகுடத்தை இப்போது துணைவேந்தர்களும் கீழே இறக்கி விட்டார்கள்.

இந்தியாவில் முதன்முறையாக ரோபோடிக் இதய துவார அறுவை சிகிச்சை – மா.சுப்பிரமணியன் பாராட்டு

MUST READ