
தொடர் கனமழை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (நவ.15) விடுமுறை அளித்து, அந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
கனமழை எதிரொலி: சென்னையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
இது தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் த.பிரபுசங்கர் இ.ஆ.ப., வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “திருவள்ளூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாகப் பெய்து வருவதாலும், இன்று இந்திய வானிலை ஆய்வு மையம் கனமழைக்கான எச்சரிக்கை விடுத்திருப்பதாலும், மாணவர்களின் நலன் கருதி இன்று (நவ.15) மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவிடப்படுகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
“கூட்டுறவுச் சங்கங்களுக்கு உடனே தேர்தல்”- அண்ணாமலை கோரிக்கை!
கனமழை காரணமாக, ஏற்கனவே சென்னையில் பள்ளிகளுக்கும், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.