துணை வேந்தர்கள் மாநாட்டில் மாநில பல்கலைக்கழகத்தை சேர்ந்த துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை எனவும் மீறி சந்தித்தால் குடும்பத்தினரை சந்திக்க முடியாது என உளவுத்துறை வைத்து மிரட்டியதாக ஆளுநர் பகிர் குற்றச்சாட்டியுள்ளாா்.பல்கலைக்கழக கல்வி மேம்பாட்டில் அரசியல் இல்லை என்றும் துணை வேந்தர் மாநாடு கல்வித்தரத்தை உயர்த்துவதற்காக மட்டுமே நடத்தப்படுவதாகவும், இதில் எந்த அரசியல் நோக்கமும் இல்லை என துணை வேந்தர்கள் மாநாட்டில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியுள்ளாா்.
உதகையில் உள்ள ராஜ் பவனின் 4-வது ஆண்டாக துணைவேந்தர்கள் மாநாடு இன்று தொடங்கியது. இந்த மாநாட்டை தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தலைமையில் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு தமிழகத்தில் உள்ள மாநில பல்கலைகழகங்கள், ஒன்றிய மற்றும் தனியார் பல்கலைகழகங்கள் என 49 பல்கலைக்கழகங்களுக்கு ஆளுநர் சார்பாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக 14 துணைவேந்தர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் 9 துணைவேந்தர்கள் மட்டுமே பங்கேற்றனர். மற்ற 25 பல்கலைக்கழகங்கள் சார்ந்த பதிவாளர்கள், பேராசிரியர்கள், டின்கள் பங்கேற்றனர். இதில் மாநில பல்கலைக்கழகங்களில் சேலம் பெரியார் பல்கலைக்கழகம் மற்றும் அழகப்பா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மூன்று பேர் மட்டுமே பங்கேற்றனர்.
மாநாட்டை துணை குடியரசுத் தலைவர் தொடங்கி வைத்த நிலையில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக கல்வி தரம் மற்றும் மாநில அரசின் செயல்பாடு குறித்து பல்வேறு விமர்சனங்களை வைத்தார். குறிப்பாக தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகள் சிறப்பாக செயல்படும் நிலையில், அரசு பள்ளிகளின் தரம் மிகவும் மோசமாக இருப்பதாகவும் பாதிக்கும் மேற்பட்ட மாணவர்கள் இரண்டு இலக்க எண்களை கூட படிக்க முடியாமல் வைப்பதாகவும் கூறினார்.
தமிழகத்தில் கல்வியில் இரண்டு வேறுபட்ட நிலைகள் உள்ளதாகவும், தனியார் பள்ளிகள் சிறப்பாக செயல்படும் நிலையில், அரசு பள்ளிகளின் தரம் மிகவும் மோசமாக இருப்பதாகவும் கூறிய அவர் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் இரண்டாம் வகுப்பு பாடப்புத்தகத்தை படிக்க முடியாத நிலையில் உள்ளதாகவும், பாதிக்கும் மேற்பட்ட மாணவர்கள் இரண்டு இலக்க எண்களை கூட படிக்க முடியவில்லை என கூறினார்.
மேலும் பல்கலைக்கழகங்களுக்கு அரசு தடையினால் மாநாட்டில் தமிழகத்தின் அரசு பல்கலைக்கழகங்கள் பங்கேற்கவில்லை என்ற ஆளுநர் மாநில அரசு, பல்கலைக்கழகங்களுக்கு மாநாட்டில் பங்கேற்கக் கூடாது என எழுத்துப்பூர்வமாக உத்தரவிட்டதாகவும் மேலும், ஊட்டிக்கு வந்திருந்த சில துணைவேந்தர்களுக்கு நள்ளிரவில் மாநில புலனாய்வு பிரிவு போலீசார் எச்சரிக்கை விடுத்ததாகவும் கூறினார். மேலும் மாநாட்டில் பங்கேற்றால் உங்கள் குடும்பத்தை சந்திக்க முடியாது என துணைவேந்தர்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.
மேலும் கல்வி மேம்பாட்டில் அரசியல் இல்லை என்றும் பல்கலை கழக துணை வேந்தர் மாநாடு கல்வித்தரத்தை உயர்த்துவதற்காக மட்டுமே நடத்தப்படுவதாகவும், இதில் எந்த அரசியல் நோக்கமும் இல்லை என கூறினார். தமிழகத்தின் கல்வித்தரத்தை மேம்படுத்த ஒருங்கிணைந்த முயற்சிகள் தேவை எனவும் கூறியுள்ளாா்.
மிரட்டல் அரசியல் எல்லாம் பா.ஜ.க.வின் டி.என்.ஏ-வில் ஊறிக் கிடக்கிறது – அமைச்சர் கோவி.செழியன்