திருவள்ளூர் மாவட்டம், ஆவடியை அடுத்த மோரை ஊராட்சிக்கு உட்பட்ட பங்காருபேட்டையைச் சேர்ந்தவர் அரி கிருஷ்ணன். இவர் தி.மு.க.வின் வில்லிவாக்கம் வடக்கு இளைஞரணி துணை அமைப்பாளராக உள்ளார். இதே பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் மற்றும் அவரது நண்பரான பிரபாகரன் ஆகியோர் பங்காருபேட்டை கிராமத்தில் உள்ள அரசுப் புறம்போக்கு நிலத்தில் பல மாதங்களாக மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மோகன்லால் படத்திற்கு நடிகர் யோகிபாபு வாழ்த்து
இது குறித்து பங்காருபேட்டை மக்கள் பொதுநலச் சங்கம் சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தி.மு.க. பிரமுகர் அரிகிருஷ்ணன் என்பவரை, கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து தொலைபேசியில் தொடர்புக் கொண்டு ராஜேஷ் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இந்நிலையில், ஜன.20- ம் தேதி மாலை அரிகிருஷ்ணனை பங்காருபேட்டை அரசுப் பள்ளி அருகே மடக்கி, ராஜேஷ் இரும்பு கம்பியால் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த அரிகிருஷ்ணன் ஆவடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்ற பின், கொலை முயற்சி குறித்து ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஜன. 21- ம் தேதி காவல்துறையினர் அரிகிருஷ்ணன் மற்றும் ராஜேஷ் இருவரையும் விசாரித்து சமரசம் செய்ய முயற்சித்துள்ளனர். விசாரணையில் ராஜேஷ் தாக்கியதை ஒப்புக்கொண்ட நிலையில், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரிகிருஷ்ணன் கூறியுள்ளார்.
அதில் உடன்பாடு ஏற்படாததால், ஜன.22- ம் தேதி மீண்டும் அரிகிருஷ்ணன் விசாரணைக்கு சென்றபோது, ராஜேஷ் ஜன. 21-ம் தேதி உன் மீது புகார் அளித்ததாக எஸ்.ஐ. பச்சைமுத்து கூறியுள்ளார்.
இதனையடுத்து முதன்முறை விசாரணைக்கு சென்றபோதே, ராஜேஷ் புகார் குறித்து தெரிவிக்காமல் காவல்துறையினர் மறைத்துள்ளது தெரிய வந்தது. இதைனையடுத்து அரிகிருஷ்ணன் மற்றும் ஊர் பொதுமக்கள் ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் நேரடியாக சென்று ஆவடி காவல் ஆணையர் சங்கரிடம் புகார் அளிக்கப்பட்டது.
வெற்றிமாறன் படத்தில் நடிக்கும் ராமராஜன் பட நாயகி
அதைத் தொடர்ந்து, ஆவடி டேங்க் பேக்டரி சட்ட ஒழுங்கு ஆய்வாளர் கோபிநாத்தை நசரத்பேட்டை காவல் நிலையத்துக்கு அதிரடியாக இடமாற்றம் செய்து காவல் ஆணையர் சங்கர் உத்தரவிட்டுள்ளார்.