spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகால்வாயை ஆக்கிரமித்து கட்டியுள்ள கட்டிடத்தை 3 மாதங்களில் அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

கால்வாயை ஆக்கிரமித்து கட்டியுள்ள கட்டிடத்தை 3 மாதங்களில் அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

-

- Advertisement -

கால்வாயை ஆக்கிரமித்து பேரூராட்சி தலைவர் கட்டியுள்ள கட்டிடத்தை மூன்று மாதங்களில் அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கால்வாயை ஆக்கிரமித்து கட்டியுள்ள கட்டிடத்தை 3 மாதங்களில் அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவுவேலூர்  மாவட்டத்தில் உள்ள பள்ளிகொண்டா கிராமத்தில்  கால்வாய் செல்லும் நீர்வழிப் பாதையில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து, பள்ளிகொண்டா பேரூராட்சி தலைவர் சுபா பிரியா மற்றும் அவரது கணவர் குமரன் ஆகியோர் கட்டிடம் கட்டியுள்ளதாகக் கூறி, சத்துவாச்சாரியைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

we-r-hiring

அந்த மனுவில், நீர்வழிப் போக்குவரத்துக் இடையூறு ஏற்படுத்தியுள்ளதால்,  மழை காலங்களில் அருகில் உள்ள கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி விடுவதால், ஆக்கிரமிப்பை அகற்ற அரசுக்கு உத்தரவிட வேண்டும் என  கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. மீதான வழக்கை ரத்து செய்ய மறுப்பு

இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், கே.குமரேஷ் பாபு அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அணைக்கட்டு தாசில்தார் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில்,   பள்ளிக்கொண்டா பேரூராட்சி தலைவர் சுபப்ரியா உள்ளிட்ட எட்டு பேர் நீர்நிலைகளை ஆக்கிரமித்துள்ளதாகவும், அவற்றை அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து, பேரூராட்சி தலைவர் சுபப்ரியாவால் மேற்கொள்ளப்பட்டுள்ள  ஆக்கிரமிப்பை மூன்று மாதங்களில் அகற்ற உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.

MUST READ