spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு78வது சுதந்திர தினம்.. சென்னை கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

78வது சுதந்திர தினம்.. சென்னை கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

-

- Advertisement -

நாட்டின் 78-வது சுதந்திர தினத்தையொட்டி சென்னை கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றிவைத்து, மரியாதை செலுத்தினார்.

நாட்டின் 78-வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி சென்னை கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பங்கேற்க காலை 8.45 மணக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோட்டை வந்தடைந்தார். அவரை தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா வரவேற்றார். பின்னர் காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றுக்கொண்டார்.

we-r-hiring

தொடர்ந்து கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றி, மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, தமிழக மக்களுக்கு சுதந்திர தின உரை நிகழ்த்தினார். அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மக்களுக்கு உண்மையாக இருப்பதை மக்கள் தொண்டு என்று செயல்பட்டு வரும் தமக்கு தமிழ்நாட்டு மக்கள் தொடர்ச்சியாக அளித்து வரும் வெற்றிக்கு தலை வணங்குவதாகவும், தமிழ்நாட்டின் உன்னதமான கோட்பாடுகளை இந்தியா முழுமைக்கும் செயல்படுத்தி காட்டும் கடமையும் பொறுப்பும் நமக்கு உண்டு என்றும் கூறினார்.

"நிர்மலா சீதாராமனுக்கு பக்தி இல்லை; பகல் வேஷம்"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்!
Video Crop Image

மாநில முதலமைச்சர்கள் தேசியக் கொடியேற்றும் உரிமையை 50 ஆண்டுகளுக்கு முன் பெற்றுத் தந்தவர் கலைஞர் என்றும், 4வது ஆண்டாக தேசிய கொடியை ஏற்றும் வாய்ப்பை பெற்றதில் பெருமை அடைவதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். முதல்வர் மருந்தகம் என்ற புதிய திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் முதற்கட்டமாக 1000 மருந்தகங்கள் திறக்கப்படும் என அறிவித்த அவர், இதில் சிறப்பாக செயல்படும் மருந்தாளுனர்களுக்கும், கூட்டுறவு அமைப்புகளுக்கும் தேவையான கடன் உதவியோடு, ₹3 லட்சம் மானியம் அரசால் வழங்கப்படும் என்றும் கூறினார். மேலும் வரும் 2026ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் 75,000க்கும் மேற்பட்ட அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

MUST READ