spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்பைக் திருடியவா் கையும், களவுமாக கைது

பைக் திருடியவா் கையும், களவுமாக கைது

-

- Advertisement -

 

பைக் திருடியவா் கையும், களவுமாக கைது

we-r-hiring

திருச்செந்தூர் அருகில் உள்ள நாசரேத்தில் பைக் திருடிய வாலிபரை கையும் களவுமாக பிடித்த பொதுமக்கள்.

தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் ஜூபிளி தெருவைச் சேர்ந்த தர்மராஜ் மகன் அபிஷேக் (26). இவர்,தனது பைக்கை வீட்டு முன் நிறுத்திச் சென்றிருக்கிறார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது பைக்கை காணவில்லை. இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில், நாசரேத் போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று அவ்வழியே பைக்கில் சந்தேகத்துக்கிடமாக வந்தவரைப் பிடித்து பொதுமக்கள் விசாரித்தபோது, அவர் திருச்செந்தூர் என்.முத்தையாபுரம் கிழக்குத் தெரு சுரேஷ் மகன் ஜெயசுதன் ( 21) என்பதும், அபிஷேக்கின் பைக்கைத் திருடியவர் என்பதும் தெரியவந்துள்ளது.

இதை அடுத்து அவர் அங்கிருந்த மற்றொரு பைக்கை திருட முயன்ற போது திருடனை கையும் களவுமாக பிடித்த அப்பகுதி மக்கள் தர்மஅடி கொடுத்துள்ளனர்.அதனைத் தொடர்ந்து போலீசாரிடம் பைக் திருட்டில் ஈடுபட்ட வாலிபரை ஒப்படைத்தனர். இது குறித்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

6 மாத குழந்தையை கொன்று புதைத்த தந்தை… 26 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நபரை கைதுசெய்த போலீசார்!

MUST READ