spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைபல்கலைக்கழக மாணவி வழக்கு தொடர்பாக தேசிய மகளிர் ஆணைய குழ விசாரணை!

பல்கலைக்கழக மாணவி வழக்கு தொடர்பாக தேசிய மகளிர் ஆணைய குழ விசாரணை!

-

- Advertisement -

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக விசாரிக்க தேசிய மகளிர் ஆணைய குழு இன்னும் சற்று நேரத்தில் அண்ணா பல்கலைக்கழகம் வருகை தரவுள்ளது.பல்கலைக்கழக மாணவி வழக்கு தொடர்பாக  தேசிய மகளிர் ஆணைய குழ விசாரணை!சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஞானசேகரன் என்ற நபரால் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் அதிர்வலையும் ஏற்படுத்தியது.

மாணவிக்கு நேர்ந்த இந்த சம்பவம் தொடர்பாக கோட்டூர்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.  இந்த நிலையில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக உயர் நீதிமன்ற உத்தரவை அடுத்து மூன்று ஐபிஎஸ் பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு விசாரணை முழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

we-r-hiring

இந்த மூன்று பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் தற்பொழுது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் உண்மை கண்டறியும் குழுவை தேசிய மகளிர் ஆணையம் அமைத்துள்ளது. இந்த குழுவில் இடம் பெற்றுள்ள ஆணையத்தின் உறுப்பினர் மம்தா குமாரி, ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி பிரவீன் தீக்சித் நேற்று இரவு சென்னை வந்தடைந்தனர்.

அவர்கள் இன்று காலை 9 மணி அளவில் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு நேரில் வந்து விசாரணை மேற்கொள்ள உள்ளனர். குறிப்பாக அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பகுதிக்கு சென்று பார்வையிட உள்ளனர். மேலும் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாப்பு குறைபாடுகள் என்னென்ன இருக்கின்றன.  குறிப்பாக மாணவிகளுக்கு அச்சுறுத்தும் வகையில் பாதுகாப்பு குறைபாடாக விளங்கக்கூடியவைகள் எவை என்பது குறித்தும் ஆய்வு செய்ய உள்ளனர்.

மாணவி அளித்த புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை எஃப்ஐஆர்… வெளியான சம்பவம் பெறும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து விசாரிக்க உள்ளனர். மேலும் சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களிடம் குழுவினர் பேசவும் வாய்ப்பு உள்ளது என் தெவிக்கப்பட்டுள்ளது.

மாணவி வழக்கில் களமிறங்கும் சிறப்பு விசாரணைக் குழு

MUST READ