- Advertisement -
மக்களை தேடி மருத்துவம் சுகாதார சேவை மட்டுமின்றி நல்ல பயன்களையும் தந்துள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளாா்.
மேலும் தனது பதிவில், “மக்களைத்தேடி மருத்துவம் என்பது வெறும் சுகாதாரப் பராமரிப்பை வழங்குவது மட்டுமல்ல, அது பலனையும் அளித்து வருகிறது. உயர் ரத்த அழுத்தத்தை 17% – மும் நீரழிவு பாதிப்பை 16.7% – மும் கட்டுப்படுத்தியுள்ளோம். மக்களை தேடி மருத்துவம் என்பதன் வாயிலாக மக்களைச் நேரடியாக சென்றடைவதன் மூலம், இந்தியா முழுவதும் பொது சுகாதாரத்துக்கான முன்மாதிரியாக உள்ளது. பொது சுகாதாரத்தின் வெற்றி எவ்வாறு அளவிடப்படுகிறது என்பதை மறுவடிவமைக்கின்றது என்று குறிப்பிட்டுள்ளாா்.
காவலர்களுக்கு வார விடுப்பு – முதல்வருக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு
