- Advertisement -
குஜராத் விமான விபத்தை நினைத்து மனதே பதறுகிறது தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் விபத்தில் உயிரிழந்தோர்க்கு விஜய் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினாா்.பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான மூன்றாம் கட்ட கல்வி விருது விழாவில், மேடையில் பேசிய தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், குஜராத்தில் நடைபெற்ற விமான விபத்தின் புகைப்படங்கள் வீடியோக்களை பார்க்கையில் மனதே பதறுகிறது. அடுத்த நொடி நிச்சயம் இல்லாத வாழ்க்கை எனவே இந்த நேரத்தில் இறந்தவர்களுக்காக இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்த வேண்டும் என நினைக்கிறேன். இந்த சூழலில் ஒரு சிறிய வேண்டுகோளாக பேச்சை குறைத்துக் கொள்ளலாம் என நினைக்கிறேன் என்றார்.