இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் அவர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்.
இன்று (09.10.2025) அதிகாலை, ஐந்து இந்திய மீன்பிடிப் படகுகள் மற்றும் 47 மீனவர்கள் — அதில் 30 தமிழ்நாடு மீனவர்களும், 17 காரைக்கால் மீனவர்களும் — இலங்கைக் கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். சிறைபிடிக்கப்பட்டவர்களில் தமிழ்நாட்டின் கடலோர கிராமங்களைச் சேர்ந்த 30 மீனவர்களும், நான்கு இயந்திரமயமான மீன்பிடிப் படகுகளும் அடங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் மீனவ சமூகத்தில் பெரும் துயரத்தையும், அச்சத்தையும் கடலோர மாவட்ட மக்களிடையே நிச்சயமற்ற நிலையை நிலை நிலவுவதாகவும் முதலமைச்சர் கவலை தெரிவித்துள்ளாா். மேலும், 2025 ஆம் ஆண்டில், ஒரே நாளில்அதிக எண்ணிக்கையிலான மீனவர்கள் கைது செய்யப்பட்டது இதுவே முதல் முறை என தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை கடற்படையினரால் மீண்டும் மீண்டும் கைது செய்யப்படுவது, அவர்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாக்குவதோடு மட்டுமல்லாமல், அவர்கள் கடலுக்குச் சென்று தங்களுடைய பாரம்பரிய தொழிலாலன மீன்பிடித்தொழிலை தொடர்வதில் உள்ள மன உறுதியையும், நம்பிக்கையையும் இது வெகுவாக பாதிப்பதாக உள்ளது என மிகுந்த வருத்தம் அளிப்பதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளாா்.
தற்போது (09.10.2025 நிலவரப்படி) தமிழ்நாட்டைச் சேர்ந்த 242 மீன்பிடிப் படகுகளும், 74 மீனவர்களும் இலங்கைக் காவலில் இருப்பதாக ஸ்டாலின் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இதுபோன்ற கைது சம்பவங்கள் மீண்டும் நிடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கவும், கூட்டுப் பணிக்குழுவை மீண்டும்செயல்பாட்டிற்கு கொண்டு வந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப்படகுகளையும் விரைவாக விடுவிக்க உரிய அதிகாரிகளை நியமித்து உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளாா்.
தவெக தலைவர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது…