spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்ஆவடி3 கோடி மோசடி…இன்ஸ்டா பிரபலம் மீது ஈ.வி.பி ப்லிம் சிட்டி உரிமையாளர் அளித்த புகாரால் பரபரப்பு…

3 கோடி மோசடி…இன்ஸ்டா பிரபலம் மீது ஈ.வி.பி ப்லிம் சிட்டி உரிமையாளர் அளித்த புகாரால் பரபரப்பு…

-

- Advertisement -

பூவிருந்தவல்லி அருகே உள்ள ஈ.வி.பி ப்லிம் சிட்டி உரிமையாளர்  சந்தோஷ் ரெட்டியின் அளித்த புகாரின் அடிப்படையில், இன்ஸ்டா பிரபலம் மீது 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.3 கோடி மோசடி…இன்ஸ்டா பிரபலம் மீது ஈ.வி.பி ப்லிம் சிட்டி உரிமையாளர் அளித்த புகாரால் பரபரப்பு…

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் , கமலஹாசன்,விஜய் அஜித்,சிம்பு,தனுஷ் என பல முன்னணி கதாநாயகர்களின் திரைப்படங்கள் ஈவிபி பிலிம் சிட்டியில் எடுத்திருந்தாலும் விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி எடுக்கப்பட்ட பின்பு தான் ஈ.வி.பி ஃபிலிம் சிட்டி பிரபலமடைந்தது. இந்த ஈ.வி.பி பிலிம் சிட்டியின் உரிமையாளர் சந்தோஷ் ரெட்டி மீது  அண்மையில் பெங்களூர் அருகே வயாலி காவல் நிலையத்தில் பெண் ஒருவர் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

we-r-hiring

அதில், இன்ஸ்டா பிரபலமும், ஆடை வடிவமைப்பாளரான பார்வதி/42 ஆகிய என்னை ஈ.வி.பி பிலிம் சிட்டி உரிமையாளர் சந்தோஷ் ரெட்டி காதலிப்பதாக கூறி தொல்லை தந்ததாகவும் காதலிக்க மறுத்தால்  தன்னையும் எனது பிள்ளைகளையும்  கொன்று விடுவதாக கொலை மிரட்டல் விடுத்ததாக அந்த புகாரில் தெரிவித்து இருந்தார். இந்த புகாரை அடுத்து பெங்களூர் வயாலி காவல்துறையினர் சந்தோஷ் ரெட்டி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சந்தோஷ் ரெட்டி மீது பெங்களூர் வயாலி காவல் நிலையத்தில் பார்வதி புகார் அளிப்பதற்கு முன்பே பூந்தமல்லி அருகே நசரத்பேட்டை காவல் நிலையம் மற்றும் ஆவடி காவல் ஆணையரக மத்திய குற்றப்பிரிவிலும்  சந்தோஷ் ரெட்டி பார்வதி மீது மோசடி புகார் அளித்திருப்பது தெரியவந்துள்ளது. அந்த புகாரில் நிகழ்ச்சி ஒன்றில் அறிமுகமான பார்வதி தன்னை இன்ஸ்டா பிரபலம் என்றும் ஆடை வடிவமைப்பாளர் என்றும் தன்னை அறிமுகம் செய்து கொண்டு நாளடைவில் சந்தோஷ் ரெட்டியிடம் நட்பாக பழகி வந்துள்ளாா் என்று தெரிவித்துள்ளாா்.

சந்தோஷ் ரெட்டியின்  வீட்டில் நடைபெற்ற சுப நிகழ்ச்சிக்காக ஆடை, வைர நகைகள் உள்ளிட்ட பொருட்களை வாங்க சந்தோஷ் ரெட்டி  பார்வதியை அணுகியுள்ளாா். அப்போது பாா்வதி தேவி புது,புது டிசைனாக வாங்கியும், வடிவமைத்தும்  தருவதாக கூறியுள்ளார். மேலும், சென்னையை விட பெங்களூருவில் தரமான நகைகளும், பிராண்டட் பொருட்களும் இருப்பதாக கூறியுள்ளார்.

இதனையடுத்து சந்தோஷ் ரெட்டி பார்வதியின் கணவர் பார்த்திபன் நடத்தி வரும் பிரைம் எண்டர்பிரைசஸ் என்ற கம்பெனி அக்கவுண்டில் 3 கோடியே 6 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்துள்ளார்.  பின்னர் ஒரு சில தினங்களில் பார்வதி மூன்று கோடி ரூபாய் தங்கள் வங்கி கணக்கில் வந்தால் தங்களுக்கு வரி பிரச்சனை வந்துவிடும் என்று அந்த பணத்தை சந்தோஷ் ரெடியின் அக்கவுண்டிற்கே திருப்பி அனுப்பியுள்ளனர். பொருட்களை வாங்க நீங்களே பெங்களூருக்கு வந்து விடுங்கள் எனக் கூறி சந்தோஷ் ரெட்டியை பார்வதி பெங்களூர் வரவழத்துள்ளாா்.

இதற்காக கடந்த ஜூலை மாதம் 12ஆம் தேதி சந்தோஷ் ரெட்டி பெங்களூரு சென்றுள்ளார். ஹோட்டலில் தங்க இருந்த சந்தோஷ் ரெட்டியை வலுக்கட்டாயமாக பார்வதியின் வீட்டில் தங்க வைத்துள்ளனர். அடுத்த நாள் சந்தோஷ் ரெட்டி பார்வதி அவரது கணவர் பார்த்திபன் ஆகியோர் பெங்களூரில் உள்ள பிரபல நகை கடை  மற்றும் LUIES VUITTON SHOW ROOM சென்று ,வைரம் பதித்த AUDEMARS PIGUET வாட்ச்,  விலையுயர்ந்த செருப்பு, பேக் என பல லட்சத்திற்கு பொருட்களை வாங்கியுள்ளனர்.

ஒவ்வொரு பொருட்களை வாங்கும் போதும் பார்வதி சொன்ன அக்கவுண்டிற்கு பணங்களை சந்தோஷ ரெட்டி அனுப்பி வைத்துள்ளார். ஏறக்குறைய 3 கோடிக்கு பொருட்கள் வாங்கப்பட்டுள்ளது. பின்னர் ஒரு சில பொருட்கள் மட்டுமே கையில் கொடுக்கப்பட்ட நிலையில் மற்ற பொருட்கள் ஆர்டரின் பெயரில் சென்னைக்கு அனுப்பி வைக்கப்படும் என கூறி சந்தோஷ ரெட்டியை சென்னைக்கு அனுப்பி உள்ளனர். 20 நாட்கள் கழித்து பொருட்கள் இன்னும் வரவில்லையே என சந்தோஷ் ரெட்டி பார்வதியை கேட்க அவரது செல்போன் என்னை அழைத்துள்ளார். ஆனால் பார்வதி செல்போன் அழைப்பை எடுக்கவில்லை.

பின்னர் செல்போனில் whatsapp கால் மூலம் அழைத்தபோது அதற்கு பதில் அளித்த பார்வதி தன்னிடமா காசு கொடுத்தீர்கள் காசு எங்கு கொடுத்தீர்களோ அங்கு வாங்கிக் கொள்ளுங்கள் என அலட்சியமாக கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சந்தோஷ் ரெட்டி தன்னை மோசடி செய்தால் காவல் நிலையத்தில் புகார் அளித்து சட்டபூர்வமாக நடவடிக்கை எடுப்பேன் என கூறியுள்ளார். இதை அடுத்து பார்வதி செல்போன் இணைப்பை துண்டித்துள்ளார்.

இந்த நிலையில்  சந்தோஷ் ரெட்டி செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி நசரத்பேட்டை காவல் நிலையத்திலும் ஆவடி காவல் ஆணையரக மத்திய குற்றப்பிரிவிலும்  புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் நசரத்பேட்டை காவல் நிலையத்தில் பார்வதி அவரது கணவர் பார்த்திபன், நித்திஷ் ஆகிய மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் மத்திய குற்றப்பிரிவு பிரிவிலும்  பார்வதியின் கணவர் வங்கி கணக்கை முடக்கி விசாரணை நடத்தி வருகிறது.

முன்னதாக பார்வதி என்பவர் கடந்த 14/7/2025 அன்று சந்தோஷ்  ரெட்டி அவரை  மிரட்டியதாக பெங்களூர் காவல் நிலையத்தில் சந்தோஷ் ரெட்டி மீது பொய் வழக்கை பதிவு செய்துள்ளார். ஆனால் அதற்குப் பின்னர் தான் சந்தோஷ ரெட்டிக்கும் பார்வதி தரப்பினருக்கும் இடையே பண பரிமாற்றங்கள் நடந்துள்ளது.

இதனிடையே சந்தோஷ் ரெட்டி  அளித்த புகார் தொடர்பாக பார்வதி மீது பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை காவல் நிலையத்தில் நம்பிக்கை மோசடி, மோசடி என 316,318,351 ஆகிய மூன்று சட்டபிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் பெங்களூர் தங்க நகை கடையில் 2 கோடிக்கு மேல் வைரம் வாங்கப்பட்ட புகாரில் ஆவடி மத்திய குற்றப்பிரிவு காவல்துறை அவரது வங்கி கணக்கை முடக்கி விசாரித்து வருகின்றனர்.

சென்னையின் தொழிலதிபரை பெண் ஒருவர் நம்பிக்கை, பண மோசடி, செய்துள்ள நிலையில் அதனை மறைப்பதற்காக இவர் மீது பொய்யான புகார் அளிக்கப்பட்டுள்ளதா என்ற கோணதில் விசாரிக்கப்பட்டு வருகிறது. பார்வதி  25 /9/2025 அன்று வயாலி காவல் நிலையத்தில் புகார் அளித்து இருந்த நிலையில் ஈ.வி.பி சந்தோஷ் ரெட்டி 17/09/2025 அன்றே நாசரத்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

மேலும் இது குறித்து சந்தோஷ் ரெட்டி தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், 3 கோடிக்கு மேல் தன்னை பார்வதி மோசடி செய்து விட்டதாகவும் இதனை கேட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் தன் மீது பொய் புகார் அளித்துள்ளதாக கூறியுள்ளார்.

அதேபோல் பார்வதி என்பவர் சமுதாயத்தில் செல்வாக்கான நபர்களை குறி வைத்து தொடர்ந்து மோசடியில் ஈடுபடுபவர். பார்வதி முன்பும் விசாகப்பட்டினம் மற்றும் கர்நாடகாவில் பிரபல தொழிலதிபர்களை ஏமாற்றிய வழக்குகளில் குற்றவாளியாக இருந்துள்ளார் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை மீட்க நடவடிக்கை தேவை – முதல்வர் கடிதம்..!!

MUST READ