- Advertisement -
சேலம் மாவட்டத்தில் இருவேறு இடங்களில் அனுமதியின்றி நடந்த எருதாட்டப் போட்டிகளில் மாடு முட்டி இருவர் உயிரிழந்துள்ளனா்.
சேலம் மாவட்டம், செந்தாரப் பட்டியில் அனுமதியின்றி எருதாட்டப் போட்டி நடத்தினா். அதில் மாடு முட்டி சக்திவேல் என்பவா் பலியானாா். அதே போல் சேலம் மாவட்டத்தில் கொண்டயம்பள்ளி என்ற மற்றொரு பகுதியில் நடந்த எருதாட்டப் போட்டியில் மாடு முட்டியதில் வினிதா (30) என்பவா் உயிரிழந்தாா்.
மேலும், சிவகங்கை மாவட்டம் சிராவயலில் மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இதில் காளை முட்டியதால், 68 போ் காயமடைந்தனா். 2 போ் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.



