நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதான வழக்கை 11 ஆண்டுகளாக நிலுவையில் வைத்திருந்தது ஏன்? என்று காவல்துறையிடம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த நாடும், இந்த நாடாளுமன்றமும் எங்களுக்கும் சொந்தம் தான்: திமுக எம்.பி கனிமொழி
நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரில், கடந்த 2011- ஆம் ஆண்டு பதியப்பட்ட வழக்கை ரத்துச் செய்யக்கோரி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று (செப்.20) காலை 11.30 மணிக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது.
“மகளிர் இடஒதுக்கீட்டில் முன்னோடி அ.தி.மு.க.”- எடப்பாடி பழனிசாமி ட்வீட்!
அப்போது, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், “நடிகை விஜயலட்சுமி புகாரை வாபஸ் பெற்ற பிறகும், நாம் தமிழர் கட்சியின் சீமான் மீதான வழக்கை 11 ஆண்டுகளாக நிலுவையில் வைத்திருந்தது ஏன்? நடிகை விஜயலட்சுமியின் புகார்கள் மற்றும் வாபஸ் பெற்ற விவரங்களைத் தாக்கல் செய்ய காவல்துறையினருக்கு உத்தரவிட்டு” வழக்கு விசாரணையை வரும் செப்டம்பர் 26- ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.