Homeசெய்திகள்தமிழ்நாடு"மகளிர் இடஒதுக்கீட்டில் முன்னோடி அ.தி.மு.க."- எடப்பாடி பழனிசாமி ட்வீட்!

“மகளிர் இடஒதுக்கீட்டில் முன்னோடி அ.தி.மு.க.”- எடப்பாடி பழனிசாமி ட்வீட்!

-

- Advertisement -

 

"1989-ல் சட்டப்பேரவையில் ஜெயலலிதாவுக்கு நிகழ்ந்தது என்ன?"- எடப்பாடி பழனிசாமி விளக்கம்!
Video Crop Image

நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்க வழி வகைச் செய்யும் மசோதா, புதிய நாடாளுமன்றத்தில் உள்ள மக்களவையில் தாக்கலான நிலையில், மசோதா மீதான விவாதம் இன்று (செப்.20) நடைபெற்றது.

வாங்கிய கடனை திருப்பி செலுத்தாத வியாபாரியை நிர்வாணமாக்கி அழைத்து சென்ற கொடூரம்

இந்த சூழலில், மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை அ.தி.மு.க. வரவேற்பதாக தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “பெண்களைப் பாதுகாப்பது மற்றும் அவர்களது பொருளாதாரத்தை மேம்படுத்துவது மட்டும் உண்மையான பெண் சுதந்திரம் ஆகாது. நாட்டை வழி நடத்துவதிலே பெண்களுக்கு உரிய பங்கு வழங்கப்பட வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து தமிழகத்தில் உள்ளாட்சி பதவிகளில் மகளிருக்கு 33% இட ஒதுக்கீடும், பின்னர் அதையே 2016- ல் 50% இடஒதுக்கீடாக உயர்த்தி வழங்கி பெண் இனத்திற்கே பெருமை சேர்த்தவர் ஜெயலலிதா தான்.

ஜியோ ஏர்ஃபைபரின் சிறப்பம்சங்கள் என்ன?

அதேபோல், 1991- ல் முதன்முதலாக ஆட்சி அமைத்த போதுதான் 31 பெண்‌ சட்டமன்ற உறுப்பினர்கள் ஜெயலலிதாவுடன் தமிழக சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதில் இந்தியாவிற்கே முன்னோடியாக திகழ்ந்தது அஇஅதிமுக மட்டும் தான் என்பதில் பெருமை கொள்வதோடு, அதனை முன்மாதிரியாக கொண்டு நாடாளுமன்றத்தில் இந்தியா முழுவதற்கும் நிறைவேற்றப்பட்டுள்ள புதிய மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வரவேற்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

MUST READ