
பெரியார் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் தங்கவேலை சஸ்பெண்ட் செய்ய தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

பிரபாஸ் – கமல் நடிக்கும் ‘கல்கி’…… கேமியோ ரோலில் இணையும் பிரபல நடிகர்கள்!
ஊழல் மற்றும் பல்வேறு முறைகேடு புகார்களில் சிக்கியுள்ள சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெகநாதன், பதிவாளர் தங்கவேல், துணை பேராசிரியர் உள்ளிட்டோர் மீது கருப்பூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவுச் செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கு விசாரணையானது சேலம் மாவட்ட கூடுதல் மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த சூழலில், பெரியார் பல்கலைக்கழக முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த அமைக்கப்பட்ட பழனிசாமி குழு அறிக்கையின் அடிப்படையில், குற்றச்சாட்டுகள் அனைத்தும் நிரூபணமானதால் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேலை சஸ்பெண்ட் செய்ய பல்கலைக்கழக துணைவேந்தருக்கு தமிழ்நாடு அரசின் உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
பதிவாளர் தங்கவேல் விரைவில் பணி ஓய்வுப் பெறவுள்ள நிலையில் பணியிடை நீக்கம் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.
தேசிய விருது பெற்ற தமிழ் படத்தின் இயக்குனர் வீட்டில் கொள்ளை!
பதிவாளர் தங்கவேலு மீதான புகாரின் அடிப்படையில் 8 குற்றச்சாட்டுகள் உறுதிச் செய்யப்பட்டுள்ளன. பல்கலைக்கழகத்தின் பதிவாளர் தங்கவேல் மீதான புகாரில் 2 குற்றச்சாட்டுகளை மீண்டும் விசாரிக்கவும் பரிந்துரைச் செய்யப்பட்டுள்ளது.