spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுசிங்கள கடற்படையின் அத்துமீறலுக்கு முடிவே இல்லையா? - அன்புமணி கேள்வி

சிங்கள கடற்படையின் அத்துமீறலுக்கு முடிவே இல்லையா? – அன்புமணி கேள்வி

-

- Advertisement -

அன்புமணி ராமதாஸ்க்கு திமுக எம்.எல்.ஏ.க்கள் கண்டனம்

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மீனவர் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண மத்திய அரசு முன்வர வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

we-r-hiring

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இராமேஸ்வரம் தனுஷ்கோடியில் இருந்து வங்கக்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 25 மீனவர்களை அவர்களின் நாட்டுப்படகுகளுடன் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். நாட்டுப்படகு மீனவர்களால் ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு மேல் செல்ல முடியாது என்பது நன்கு தெரிந்தும், அவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிக்க வந்ததாகக் கூறி சிங்களக் கடற்படையினர் கைது செய்திருக்கின்றனர். இலங்கை கடற்படையினரின் இந்த அத்துமீறல் கண்டிக்கத்தக்கது. கடந்த ஜூன் மாதம் 17-ஆம் தேதி தொடங்கி நேற்று வரையிலான இரு வாரங்களில் மட்டும் மொத்தம் 61 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

அவர்களில் 10 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ளது. தமிழக மீனவர்களுக்கு சொந்தமான 166 விசைபடகுகளை பறிமுதல் செய்திருக்கிறது. இலங்கைக் கடற்படையினரின் இத்தகைய அட்டகாசத்தை தடுக்க வேண்டும் என்று பலமுறை மத்திய அரசை வலியுறுத்தியும் இதே நிலை தொடருவது கவலையளிக்கிறது. மத்திய அரசு உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும் விடுதலை செய்யவும், அவர்களின் படகுகளை மீட்டுத் தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காணவும் மத்திய அரசு முன்வர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

MUST READ