Homeசெய்திகள்கட்டுரைகூட்டணிக்கு 70 தொகுதிகள்! ஸ்டாலினின் மாஸ்டர் பிளான்! தராசு ஷ்யாம் நேர்காணல்!

கூட்டணிக்கு 70 தொகுதிகள்! ஸ்டாலினின் மாஸ்டர் பிளான்! தராசு ஷ்யாம் நேர்காணல்!

-

- Advertisement -

2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்கிற கட்டயம் ஏற்பட்டிக்கிறது. எனவே திமுக கூட்டணி கட்சிகளுக்கு கடந்த முறை வழங்கப்பட்ட இடங்களை விட ஒன்றிரண்டு தொகுதிகள் மட்டும் தான் கூடுதலாக வழங்க வாய்ப்பு உள்ளதாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.

shyam
மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம்

திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூடுதல் இடங்கள் கேட்பது தொடர்பாகவும், அதிமுக அணியில் பாஜவுக்கு 70 இடங்கள் தர வேண்டும் என கேட்பதன் பின்னணி குறித்தும் தராசு ஷ்யாம் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கூறியுள்ளதாவது:- தேர்தலின்போது பெரிய கட்சிகளிடம் இருந்து, கூட்டணிக் கட்சிகள் அதிக இடங்களை விரும்பவது வழக்கமான ஒன்றாகும். எந்த கூட்டணியாக இருந்தாலும் 234 தொகுதிகள் தான் உள்ளன. தமிழக தேர்தல் வரலாற்றில் கூட்டணி கட்சிகளுக்கு அதிக தொகுதிகள் கொடுத்தது என்றால், அது 2001 சட்டமன்றத் தேர்தலின்போது ஜெயலலிதா வழங்கியதுதான். அதிமுக  144 இடங்களில் போட்டியிட்டது. கூட்டணி கட்சிகளுக்கு 90 தொகுதிகளை வழங்கினார். ஜெயலலிதா மீது பல்வேறு வழக்குகள் இருந்ததால் அவர் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டது. அவரே போட்டியிடாபோது, அதிமுகவை ஆட்சிக்கட்டிலில் அமர்த்த வேண்டும் என்கிற கட்டாயம் வருகிறபோது, கூட்டணி கட்சிகளுக்கு ஏராளமான இடங்களை விட்டுக்கொடுத்தார்.

அப்படி இருந்தபோதும் அதிமுக கூட்டணி பலம் காரணமாக 130-க்கும் மேற்பட்ட இடங்களில் வென்று தனிப் பெரும்பான்மை பெற்றது. 2011 சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி கட்சிகள் அவசியம் என்று ஜெயலலிதா நினைத்தார். ஆனால் 2016 தேர்தலில் அவர் கூட்டணிக்கே செல்லவில்லை. அனைவரும் இரட்டை இலையில் நிற்க வேண்டும். அப்படி நிற்பதாக இருந்தால் கூட்டணிக்கு வாங்க என்றார். அதனால் 234 தொகுதிகளிலும் இரட்டை இலை தான். தமிழக அரசியலில் அந்த ஒரே ஒரு பரிசோதனை முயற்சிதான் நடைபெற்றது. மற்றபடி பெரிய கட்சிகள், சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து 60 முதல் 70 தொகுதிகளை விட்டுக்கொடுத்து, கூட்டணி ஒப்பந்தம் அமைக்கும்.

திமுக கூட்டணி இருக்கிறது. 234 தொகுதிகள் உள்ளன. தொகுதி பங்கீட்டிற்கு உள்ள வாய்ப்புகள் என்ன என்று பார்த்தோம் என்றால்? 65 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு விட்டுக் கொடுத்தால், திமுக 169 தொகுதிகளில் போட்டியிடும். கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் தேசிய கட்சியான காங்கிரஸ், பாஜகவை எதிர்க்க திமுகவுக்கு அவசியம். அதனால் காங்கிரஸ் கட்சிக்கு குறைந்தபட்சம் 30- 35 இடங்களை விட்டுத்தர வேண்டும். எஞ்சியிருக்கும் 30 தொகுதிகளில்,  விசிக கடந்த முறை வாங்கியதை விட ஒரு தொகுதி கூடுதலாக கேட்பார்கள்.

சிபிஎம், சிபிஐ, ஐயூஎம்எல் மற்றும் சிறிய கட்சிகள் என அனைவரையும் கூட்டணி சேர்க்கிறபோது, 2021ல் கொடுத்த இடங்களை விட ஒன்று, 2 இடங்கள் தான் கூடுதலாக தர முடியும். இரட்டிப்பாக கொடுப்பதற்கான வாய்ப்புகள் என்பது கிடையாது. 2021ல் பாஜக ஆட்சிக்கு வராமல் தடுப்பதற்காக தான், கூட்டணி கட்சிகள் திமுக ஒதுக்கிய இடங்களில் போட்டியிட்டார்கள். தற்போதும் அதிமுக – பாஜக கூட்டணி ஆட்சி அமைப்பதாக சொல்கிறார்கள். அப்போது, அவர்கள் ஆட்சிக்கு வராமல் தடுப்பது போன்ற வியூகம் தான் இம்முறையும் வரும். எனவே பழையடி அதே கட்டாயத்திற்கு தான் கூட்டணி கட்சிகள் தள்ளப்படும்.

சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதா தமிழகத்தில்?? சிக்கலில் திமுக??

திமுக கூட்டணியில் தங்களுக்கு போதிய இடம் தரவில்லை. நாங்கள் கூட்டணியில் இருந்து வெளியேறுகிறோம் என்று சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் சொன்னால் ஒன்று தனி அணி அமைக்க வேண்டும். அப்படி ஏற்கனவே அமைத்த மக்கள் நலக்கூட்டணி மிகப்பெரிய தோல்வியை தழுவி விட்டது. தற்போது விஜயகாந்த் இடத்தில் விஜய் தான் இருக்கிறார். அப்போது விஜயை முதலமைச்சர் ஆக்குகிறேன் என்று சண்முகம் செல்வாரா? எதிர்க்கட்சித் தலைவராக இருந்த விஜயகாந்தை முதலமைச்சர் வேட்பாளர் ஆக்குவதற்கு அவர்களுக்கு நெருடல் இல்லை. உண்மையில் சிபிஎம், சிபிஐ கட்சிகளுக்கு கூட்டணிக்கான வேறு வாய்ப்புகள் கிடையாது.

அதிமுக கூட்டணியில் பாஜக உள்ளதால், அங்கே செல்ல மாட்டார்கள். அணிச்சேர்க்கையில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்றால் இரண்டு விஷயங்கள் நடைபெற வேண்டும். முதலாவது விஜய், முதலமைச்சர் வேட்பாளர் தான் இல்லை. திமுகவை வீழ்த்துவதுதான் எங்களின் திட்டம். தேர்தலுக்கு பின்னர் மூத்த தலைவர்கள் கூடி முதலமைச்சர் யார் என்று முடிவுவ செய்வோம் என்கிற நிலைப்பாட்டினை எடுக்க வேண்டும். அல்லது அதிமுக பாஜக கூட்டணியை விட்டு வெளியே வர வேண்டும். அப்படி நடந்தால் சிபிஎம், சிபிஐக்கு வாய்ப்பு கிடைக்கும். இல்லாவிட்டால் கேட்டலிஸ்ட் ஆக தான் இருக்க வேண்டும்.

2024 மக்களவை தேர்தலில் பாஜக 11 சதவீதம் வாக்குகள் வாங்கியது. அதிமுக 20 சதவீதம் வாங்கியது. அப்போது 2:1 என்கிற விகிதத்தில் இடங்களை தர வேண்டும் என்று சொல்கிறார். அண்ணாமலை தொடக்கம் முதலே கூட்டணி அமைப்பதில் விருப்பம் கிடையாது. பாஜக நாட்டை ஆளும் கட்சி. தமிழ்நாட்டில் படிப்படியாக ஆட்சியை பிடிக்கும். எனவே கட்சியை பலப்படுத்த வேண்டும் என்று சொல்கிறார். ஒரு வருடத்திற்கு முன்னதாக கூட்டணி அறிவிக்கிறார்கள். எனக்கு இன்னமும் அந்த கூட்டணி நீடிக்குமா? என சந்தேகம் உள்ளது. பாஜகவுக்கு 50 இடங்கள் தருவது சாத்தியமில்லாதது. எடப்பாடி பழனிசாமி 15 இடங்களில் இருந்து தான் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்குவார். தமிழ்நாட்டின் 100 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு விட்டுக் கொடுத்தோம் என்றால் பாதி தமிழ்நாட்டில் கட்சியே இல்லாமல் போய்விடும். எல்லோருக்கும் முதலில் தங்கள் கட்சியின் வளர்ச்சி தான் முக்கியமாகும்.

 

திமுக தற்போது கேரளாவில் வேட்பாளரை நிறுத்த உள்ளனர். புனலூர் தொகுதியில் வேட்பாளரை நிறுத்தி வெற்றி பெறுவோம் என்கிறார்கள். ஆனால் அங்கே கூட்டணிக்கு தலைமை வகிப்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட். அவர்கள் கொடுப்பார்களா? முதலமைச்சர் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துகிறபோது, என்ன சொல்வார்? கேரளாவில் எங்களுக்கு சீட் வேண்டாம். அதுபோன்று தமிழ்நாட்டில் உங்களுக்கு சீட் கிடையாது என்று சொல்வார். இவ்வளவுதான் உங்களுக்கு அரசியல் என்று தான் கடைசியில் முடியும். ஆனால் இப்போது ஏன் இப்படி பேசுகிறார்கள் என்றால் அவர்களுக்கு வேறு வழி கிடையாது.  இப்படி பேசினால்தான் கட்சிக்காரன் வேலை பார்ப்பான். நடப்பு அரசியலில் நமது கட்சிக்காரர்களை உற்சாகப்படுத்த வேண்டும் என்பதற்காக காட்டப்படுகிற கேரட் அது. நமக்கு இந்த தொகுதியில் வாய்ப்பு கிடைக்கும் என்கிற அந்த கேரட் தான், இவ்வாறு அவ்வாறு தெரிவித்தார்.

MUST READ