Homeசெய்திகள்கட்டுரைகுருமூர்த்தியை துரத்தியடித்த ராமதாஸ்! காலில் விழுந்த அன்புமணி! ரகசியம் உடைக்கும் தாமோதரன் பிரகாஷ்!

குருமூர்த்தியை துரத்தியடித்த ராமதாஸ்! காலில் விழுந்த அன்புமணி! ரகசியம் உடைக்கும் தாமோதரன் பிரகாஷ்!

-

- Advertisement -

பாமகவில் அனைத்து அதிகாரங்களும் கட்சியின் நிறுவனரான ராமதாசிடம் தான் உள்ளதாகவும், இதனை அன்புமணி புரிந்து கொண்டுவிட்டதால் அவர் ராமதாசிடம் சமாதானம் பேச இறங்கி வந்துவிட்டதாகவும் மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

பாமகவில் நடைபெறும் தந்தை – மகன் மோதல் குறித்தும், ஆடிட்டர் குருமூர்த்தி ராமதாசை சந்தித்தன் பின்னணி குறித்து மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- மருத்துவர் ராமதாஸ்,  அன்புமணி இடையே பிரச்சினை என்றால் அவர்கள் குடும்பம் உட்கார்ந்து பேச வேண்டும். அல்லது வன்னியர் சங்கத் தலைவர்கள் யாராவது உட்கார்ந்து பேச வேண்டும். இதில் குருமூர்த்திக்கு என்ன வேலை? ஏற்கனவே பழ.கருப்பையா எழுதிய கடிதத்தை செய்தியாளர் சந்திப்பில் வாசித்துகாட்டிய ராமதாஸ், அப்பனிடம் தோற்பது தோல்வி ஆகாது என்று சொல்லி இருந்தார். அதேபோல் துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி, அப்பனும் மகனும் பிரிவதால் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வாக்குகள் பலவீனமாகும். தே.ஜ.கூ வெற்றிக்கு இடைஞ்சலாக வரும் என்று எழுதியுள்ளார். இது தொடர்பாக விளக்கம் கேட்க ராமதாஸ் போனில் தொடர்புகொண்டபோது, தானே நேரில் வந்து விளக்கம் அளிப்பதாக ஆடிட்டர் குருமூர்த்தி கூறியுள்ளார். அதன் காரணமாக தான் அவர் தைலாபுரத்துக்கு வந்துள்ளார்.  அதிமுகவில் ஓரங்கட்டப்பட்டிருக்கும் முன்னாள் மேயர் சைதை துரைசாமி கடந்த 20 நாட்களாக ராமதாசிடம் பேசிக் கொண்டிருக்கிறார். குருமூர்த்தி சந்திப்போதும், துரைசாமியும் உடனிருந்துள்ளார். அப்போது, உண்மையிலேயே பிரச்சினையை பேசித் தீர்ப்பதற்காக சென்ற அன்புணி, அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார்.

பாஜக உடன் கூட்டணி வைக்கும் விவகாரம் தொடர்பாக தான் தந்தை – மகன் இடையே பிரச்சினையாகும். அதனால் இந்த பிளவிலும் பாஜகவின் தொடர்பு இல்லாமலா இருக்கும். ராமதாஸ், பாஜக கூட்டணிக்கு எதிரான மனநிலையில் எல்லாம் கிடையாது. கூட்டணி பேச்சுவார்த்தையின்போது பிரதமர் மோடியை கட்டி அணைத்தவர்தான் மருத்துவர் ராமதாஸ். அன்புமணி மீது இந்தூர் மருத்துவக்கல்லூரி வழக்கு நிலுவையில் உள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தைக்கு முதல் நாளில் தான் வழக்கு விசாரணைக்கு அன்புமணி நாள்தோறும் ஆஜராக வேண்டும் என்று டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது. அப்படி விசாரணை நடந்தால் அன்புமணி சிறைக்கு சென்றுவிடுவார். அதன் காரணமாக அன்புமணிக்கு, பாஜக கூட்டணிக்கு செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. இதற்காக தான் ராமதாசின் கால்களை பிடித்து அன்புமணி அழுதார். பாமகவை பொருத்தவரை நிறுவனராக உள்ள ராமதாஸ் தான் முக்கியமானவர். அவருக்கு அடுத்தபடியாக தான் அன்புமணி உள்ளார். எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 4 ஆயிரம் நக்சல் தோழர்களை, வால்டர் தேவாரம் தலைமையிலான குழுவினர் அடித்துக்கொன்றார்கள்.

அப்போது நக்சல் ஆதரவாளர்கள் தனித்தனியாக பிரிந்து பிரிந்து சென்ற நிலையில், வன்னிய சமூக மக்களுக்காக இடஒதுக்கீடு வேண்டும் போராடத்தில் ஈடுபட்டு 25 பேர் உயிரிழக்க காரணம் நக்சல் அமைப்பு செலுத்திய ஆளுமை தான். புலவர் தீரன், நக்சலைட் ஆதரவாளர் ஆவார். அப்படி உருவாக்கப்பட்ட பாமகவின் வாக்கு வங்கிக்கு சொந்தக்காரர் என்பது மருத்துவர் ராமதாஸ் தான். அப்போது, ராமதாஸ் அளித்த வாக்குறுதிகள் தான் நான் நாடாளுமன்றத்திற்கு செல்ல மாட்டேன். என் குடும்பத்தில் இருந்து யாரும் அரசியலுக்கு வர மாட்டார்கள். அதையும் மீறி அன்புமணியை அனுப்புகிறபோது, நக்சல் ஆதரவாளர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை மீறினார். சமூக நீதிப் போராட்டத்தில் உயிர்நீத்த 20க்கும் மேற்பட்ட தியாகிகளுக்கு ஒருவருக்கு கூட நிதியுதவி செய்யவில்லை. இன்றைக்கு ராமதாஸ் குடும்பத்தின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு  ஒரு லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் ஆகும். சுவிட்சர்லாந்தில் மட்டும் 30 ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்கள் உள்ளது. புனே மருத்துவக்கல்லூரி வழக்கில் அன்புணி சிக்கியதால் பாஜக கூட்டணிக்கு ராமதாஸ் சம்மதித்தார்.

சௌமியா அன்புமணி, தருமபுரி தேர்தலில் வெற்றி பெற்றிருந்தால் மத்திய அமைச்சர் ஆகும் நிலை ஏற்பட்டது. பின்னர் ராமதாசின் துணைவியார் சுசிலாவுக்கும், சௌமியாவுக்கும் மோதல் ஏற்பட்டது. இந்த பிரச்சினை தொடர்பாக அன்புமணி, தந்தை ராமதாசை நோக்கி பாட்டிலை வீசினார். அவர் அம்மாவை நோக்கி பாட்டிலை வீசவில்லை. தந்தையை நோக்கி தான் வீசினார். இதன் காரணமாக ஆத்திரமடைந்த ராமதாஸ், அன்புமணியை தலைவர் பதவியில் இருந்து நீக்கி நடவடிக்கை மேற்கொண்டார். பாமகவின் சட்டவிதிகளின்படி நிறுவனருக்கு தான் பொதுக்குழுவை கூட்ட  அதிகாரம் உள்ளது. அதன் காரணமாக பொருளாளர் திலகபாமா, மாவட்ட செயலாளர்களை நீக்கிக் கொண்டிருக்கிறார். வழக்கறிஞர் பாலு, ராமதாசின் மகள் உள்ளிட்டோர் ராமதாசிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதன் காரணமாக தான் அன்புணி, தைலாபுரம் வீட்டிற்கு வந்தார்.

பாமக கடந்த 3 தேர்தல்களாக பாஜக கூட்டணியில் உள்ளதால், வன்னியர்கள் மத்தியில் ஆர்எஸ்எஸ் ஊடுருவி இருக்கிறது. கடந்த தேர்தலில் பாஜக 18 சதவீத வாக்குகளை வாங்குவதற்கு பாஜக வாக்குகளும் காரணமாகும். இந்நிலையில், பாமகவை அன்புமணியை வைத்து உடைத்து, அவரை டிடிவி தினகரன் போல பாஜகவில் இணைத்துவிடலாம் என்று நினைத்தார்கள். இதன் காரணமாக அந்த கட்சிக்கு 30 சதவீத வாக்குகள் வந்துவிடும் என்று நினைத்தனர். ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்தால், அவரை தூக்கி எரிந்துவிடலாம் என்று எண்ணினார்கள். இந்த பணியை தொடங்கியது பாஜக. பழுத்த அரசியல்வாதியான ராமதாஸ் இதை புரிந்துகொண்டார். இதன் காரணமாக தனது பேரன் முகுந்தனை கட்சிக்குள் கொண்டுவந்தார். அன்புமணியை தலைவர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு, செயல் தலைவராக அறிவிக்கிறார். அன்புமணியின் ஆதரவாளரான திலகபாமாவை நீக்கிவிட்டு இஸ்லாமியர் ஒருவரை பொருளாளராக நியமிக்கிறார். அன்புமணியின் ஆதரவு மாவட்ட செயலாளர்களையும் நீக்கினார்.

அன்புமணியை வைத்து பாமகவை கைப்பற்றும் திட்டம் தோல்வி அடைந்துவிட்டதால் தற்போது பாஜகவும், அன்புமணியும் ராமதாசிடம் சரணடைந்துவிட்டனர். அன்புமணி தலைவர் பதவியை விட்டுக்கொடுப்பதை தவிர மற்ற அனைத்துக்கும் ஒப்புக்கொண்டு விட்டார். முகுந்தனுக்கு பதவி வழங்கிடவும், சௌமியாவை கண்டிக்கவும் தயார். ஆனால் ராமதாஸ் எதற்கும் தயாராக வில்லை. இதற்கிடையே தான் குருமூர்த்தியும், துரைசாமியும் வந்துள்ளனர். சமரச பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துவிட்டதுதான். ஆனால் அன்புமணியே இறங்கிவந்து விட்டதால் பாமகவில் சூடு சற்று தணிந்துள்ளது. பாமகவின் சட்ட விதிகள் மிகவும் வலிமையானது. அந்த கட்சியில் எந்த ஒரு கூட்டமும், நிறுவனரின் ஒப்புதல் இல்லாமல் நடக்கக் கூடாது. பாமக என்பது ராமதாசை சுற்றி பிணைந்த கட்சியாகும். நக்சல் தோழர்கள் போன்றுதான் அவர் கிராமம் கிராமமாக சென்று கட்சியை கட்டமைத்தார். 21 பேர் இறந்த போராட்ட எழுச்சியின் தற்போதைய அடையாளமாக இருப்பவர் ராமதாஸ் மட்டும்தான். அதனால்தான் காடுவெட்டி குருவாலே, ராமதாசை வீழ்த்த முடியவில்லை. யாராலும் அவரை ஒன்றும் செய்ய முடியவில்லை. அவரை தோற்கடிக்க முடியால் சமாதானம் செய்ய முயன்றனர். அதும் தோல்வி அடைந்துவிட்டது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ