spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைசெங்கோட்டையன் வீசிய வெடி! அமித்ஷாவை சந்தித்த மிதுன்!  உடைத்துப்பேசும் பத்திரிகையாளர் ப்ரியன்!

செங்கோட்டையன் வீசிய வெடி! அமித்ஷாவை சந்தித்த மிதுன்!  உடைத்துப்பேசும் பத்திரிகையாளர் ப்ரியன்!

-

- Advertisement -

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தான் கட்சியில் இருந்து புறக்கணிக்கப்படுவதன் காரணமாகவே எதிர்ப்பை வெளிப்படுத்தி உள்ளார் என்றும், மற்றபடி எடப்பாடி பழனிசாமியுடன் மோதிடும் எண்ணம் அவரிடம் இல்லை என்றும் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் விளக்கம் அளித்துள்ளார்.

we-r-hiring

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இடையிலான மோதல் விவகாரம் குறித்து மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள நேர்காணலில் கூறியிருப்பதாவது:-  அதிமுகவில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கொந்தளிப்பை வெளிப்படுத்தியது என்பது அவரது மனக்குமுறல் தான். செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து ஓரங்கட்டப்படுகிறார். அவர் பகுதிக்கு அவரை கேட்காமலேயே நிர்வாகிகளை நியமிக்கிறார்கள். ஈரோடு கிழக்கு இடைத்தேலில் அவரை கேட்காமலேயே தேர்தலில் போட்டியிட வேண்டாம் என முடிவெடுக்கிறார்கள். கட்சி கூட்டங்களில் ஜெயலலிதா, எம்ஜிஆர்-ஐ பின்னுக்கு தள்ளி விட்டு எடப்பாடியை ஆகா ஓகோ என்று புகழ்கிறார்கள். இது செங்கோட்டையன் போன்ற பழைய கட்சிக்காரர்களுக்கு வருத்தத்தை அளிக்கிறது.

அத்திக்கடவு – அவினாசி திட்ட பாராட்டு விழா குறித்து செங்கோட்டையன் அதிருப்தியை வெளிப்படுத்தியது என்பது, ஜெயலலிதா – எம்.ஜி.ஆர் படங்கள் போடாதது குறித்து கட்சியின் பொதுச் செயலாளர் ஆகிய எடப்பாடி பழனிசாமியே கேட்காமல் இருக்கிறீரகளே, நான் சொல்லித்தான் நீங்கள் கேட்க வேண்டுமா? என சொல்கிறார். உங்களுடைய படத்தை போட தெரிந்தர்களுக்கு ஏன் எம்ஜிஆர். ஜெயலலிதா படத்தை போடத் தெரியவிவல்லை?. உங்களை பிரபல படுத்திக்கொள்ள விரும்புகிறீர்களா? என செங்கோட்டையன் கேட்கிறார். அதிமுகவில் மூத்த நிர்வாகியான செங்கோட்டைனை ஓரம் கட்டிவிட்டனர். எடப்பாடி பழனிசாமியோ இவரிடம் ஆலோசனை கேட்கலாமா? வேண்டாமா? என்கிற மனநிலையில் தான் உள்ளார். கேட்கவில்லை என்றால் தவறாக நினைத்துக் கொள்கிறார். கேட்டால் வேறு எதோ சொல்கிறார். அவர் சொல்லும் விஷயத்தையும் கேட்க முடியவில்லை. அதனால் எதற்கு செங்கோட்டையனை கண்டுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி ஓரம்கட்டி வைத்திருந்தார். அது செங்கோட்டையனுக்கு எப்படி தோன்றுகிறது என்றால், நாம் கட்சியிலேயே சீனியராக இருக்கிறோம். நம்மை வந்து ஓரம் கட்டுகிறார்கள். நமக்கு தெரியாமல் நிர்வாகிகள் போடுகிறார்கள் என்பது அவருக்கு வருத்தமாக உள்ளது.

edappadi palanisamy
edappadi palanisamy

தற்போது செங்கோட்டையன் தனது விரக்தியை வேதனையை வெளிப்படுத்துகிறார். அவர் நான் அதிமுகவில் ஒரு மூத்த தலைவர். என்னிடமும் கலந்தாலோசியுங்கள் என்றுதான் சொல்கிறார். அதிமுக தேர்தலில் தோல்வியுற்ற பின்னர் அமைக்கப்பட்ட குழுவில் செங்கோட்டையன் இடம்பெறவில்லை. மாவட்ட வாரியாக களஆய்வுகள் மேற்கொண்டபோதும் அவர்  இடம்பெறவில்லை. இத்தனைக்கும் தமிழகம் முழுவதும் உள்ள கட்சிக்காரர்களை அவருக்கு நன்றாக தெரியும். பலவிதமான சூழல்களில் வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார், முனுசாமி போன்றோர்தான் ஆய்வு செய்து முடிவுகளை எடுக்கிறார்களே தவிர, ஒரு மூத்த தலைவர் இருக்கிறாரே, அவரிடம் சென்று கேட்போம் என்ற எண்ணமே எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்கு வரவில்லை. அதன் காரணமாகவே செங்கோட்டையன் இந்த கொந்தளிப்பை வெளிப்படுத்துகிறார்.

எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுன், கூட்டணி உள்ளிட்ட அதிமுகவின் பல்வேறு விவகாரங்களில் தலையிடுவதாக கூறப்படுகிறது. அவர் ஆதவ் அர்ஜுனாவுடன் தொடர்பில் உள்ளதாகவும், அமித்ஷாவை சந்தித்ததாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் அதன் உண்மைத்தன்மை குறித்து தெரியவில்லை. அதிமுக வலுவான கூட்டணி அமைப்பதற்கான சில விஷயங்களில் மிதுன் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார் என்பது தெரிகிறது. அவருக்கு வேலுமணி, தங்கமணி போன்றோர் உடனிருந்து உதவி செய்து கொண்டிருக்கிறார்கள். ஆதவ் அர்ஜுனா தவெகவில் இணைந்த பிறகும் மிதுனுடன் தொடர்பில்தான் இருக்கிறார். ஆனால் செங்கோட்டையனுக்கு அது ஒரு விஷயம் இல்லை. தம்மை அதிமுகவில் இருந்து ஓரங்கட்டுகிறார்கள், ஒதுக்குகிறார்கள் என்றுதான் அவருக்கு ஆதங்கம். ஆனால் செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமியுடன், பெரிய அளவிலான மோதலுக்கு தயாராக இல்லை. எடப்பாடி பழனிசாமியுடன் மோதுவது என்றால் நேரடியாகவே அவரது செயல்பாடுகள் சரியில்லை, தேர்தலில் வெற்றி பெறவில்லை என்று பேசலாம். ஆனால் செங்கோட்டையன் அவருக்கு உள்ள வருத்தத்தை வெளிப்படுத்துகிறாரே தவிர எடப்பாடி குறித்து தனிப்பட்ட முறையில் எதுவும் பேசவில்லை.

ஆளும் திமுக மீதுள்ள அதிர்ப்தியினால் அதிமுக 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்- எஸ். அப்துல் ரஹீம் பேட்டி!

உதயகுமார் விட்ட அறிக்கையைகூட பாருங்கள், நான் துரோகிகள் என்று செங்கோட்டையனை சொல்லவில்லை என்றும், பொதுவாகத்தான் சொன்னேன் என்றும் சொல்கிறார். அதற்கு முதல் நாள்தான் ஓபிஎஸ் நீதிமன்ற வழக்கில் தர்மம் வெல்லும் என்றார். ஒரு வேலை ஓபிஎஸ்-ஐ சொன்னதுக்கு கூட இருக்கலாம். இதனால் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுமே செங்கோட்டையனுடன் மோதலுக்கு தயாராக இல்லை. ஏற்கனவே ஓபிஎஸ், தினகரன் போன்றோர் அதிமுகவில் இருந்து வெளியே இருக்கும் நிலையில், தேர்தலை நோக்கி செல்லும் போது செங்கோட்டையன் போன்றோரை பகைத்துக் கொண்டால் மீண்டும் அதிமுகவில் பிளவு ஏற்பட்டால் கட்சியை பாதிக்கும் என்பதால் அவர்கள் மோதல் வேண்டாம் என இருக்கின்றனர், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ