Homeசெய்திகள்வேலைவாய்ப்பற்ற பதிவுதாரர்களுக்கு உதவித் தொகை-திருவள்ளூர் கலெக்டர்

வேலைவாய்ப்பற்ற பதிவுதாரர்களுக்கு உதவித் தொகை-திருவள்ளூர் கலெக்டர்

-

- Advertisement -

திருவள்ளூர் கலெக்டர் த.பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து காத்திருக்கும் வேலைவாய்ப்பற்ற பதிவுதாரர்களுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

வேலைவாய்ப்பற்ற பதிவுதாரர்களுக்கு உதவித் தொகை-திருவள்ளூர் கலெக்டர் இதை பெறுவதற்கு, பொதுப்பிரிவு இளைஞர்கள் தங்கள் கல்வி தகுதியை பதிவு செய்து 5 வருடமும், அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு வருடம் போதுமானது. உதவித்தொகை பெற தகுதியுள்ள, விருப்பமுள்ள பதிவுதாரர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரிலோ, https: //tnvelaivaaippu. gov. in மற்றும் https: //employmentexchange. tn. gov. in ஆகிய இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பம் பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் பிப். 28க்குள், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

MUST READ