Homeசெய்திகள்ஆவடிஒரு நிமிடத்தில் இந்திய வரைபட வடிவில் நின்று, சிறுதானியத்தை விதைத்து உலக சாதனை!

ஒரு நிமிடத்தில் இந்திய வரைபட வடிவில் நின்று, சிறுதானியத்தை விதைத்து உலக சாதனை!

-

- Advertisement -

உலக சிறுதானிய ஆண்டை  முன்னிட்டு 5000 பள்ளி மாணவ, மாணவிகள் ஒரு நிமிடத்தில் இந்திய வரைபடத்தின் வடிவில் நின்று சிறுதானியத்தை விதைத்து உலக சாதனை நிகழ்த்தி ஆசியா புக் ஆஃப் ரெகார்ட் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளனர்.

போதி அறக்கட்டளை மற்றும் குருசேத்திர ஐஏஎஸ் அகாடமி இணைந்து,  உலக சிறுதானிய ஆண்டை முன்னிட்டு உலக சாதனை  நிகழ்வு நடத்தப்பட்டது.  ஆவடி அடுத்த முகப்பேரில் அமைந்துள்ள தனியார் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 25க்கும் மேற்பட்ட பள்ளியில் இருந்து சுமார் 5000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஒரு நிமிடத்தில் இந்திய வரைபடத்தின் வடிவில் நின்று, சிறுதானியம் விதைத்து உலக சாதனை நிகழ்த்தி ஆசிய புக் ஆப் ரெக்கார்ட் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளனர். இந்த நிகழ்ச்சியயை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான திருநாவுக்கரசு தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்ட ஆணையரின் உறுப்பினர் தீனதயாளன், ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வாசுகி உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றனர்

.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த குருசேஸ்திர ஐஏஎஸ் அகாடமி நிறுவனத்தின் இயக்குனர் வாசுகி வினோதினி கூறியதாவது: சமுதாயத்தின் மேம்பாட்டுக்காகவும் நாட்டின் பசி இல்லா உலகத்தையும், வறுமை இல்லா உலகத்தை கொண்டு வர வேண்டும் என்றால் கல்வியால் மட்டும் தான் சாதிக்க முடியும் அதற்காகத்தான் அறம் விதைப்போம் என்ற தலைப்பில் இப்படிப்பட்ட ஒரு மாபெரும் உலக சாதனை நிகழ்வு நடத்தப்பட்டது. 25க்கும் மேற்பட்ட பள்ளியிலிருந்து சுமார் 5000க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த உலக சாதனை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இந்திய வரைபடத்தின் வடிவில் நின்று சிறு தானியங்களை ஒரு நிமிடத்தில் விதைத்து உலக சாதனை நிகழ்த்தி ஆசியா புத்தகத்தில் இடம் பெற்றுள்ளனர்.

.சிறுதானியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக வரும் சங்கதிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காகவும் இப்படிப்பட்ட ஒரு உலக சாதனை நிகழ்வு நடத்தப்பட்டது இந்த உலக சாதனை நிகழ்விடத்தில் ஆசியா புத்தகத்தில் இடம் பெற்று நிகழ்விடத்தில் அதற்கான பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினர் வருங்காலத்தில் இது போன்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகள் தங்கள் போதி அறக்கட்டளை சார்பில் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.

MUST READ