Homeசெய்திகள்ஆவடிலஞ்சம் வாங்கிய ஆவடி இணை சார் பதிவாளர் கையும் களவுமாக சிக்கினார்!

லஞ்சம் வாங்கிய ஆவடி இணை சார் பதிவாளர் கையும் களவுமாக சிக்கினார்!

-

ஆவடி சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய அதிரடி சோதனையில், இணை சார்ப்பாதிவாளர் அமுல்ராஜ் லஞ்சம் பெறும்போது கையும் களவுமாக சிக்கிக்கொண்டார்.

திருவள்ளூர் மாவட்டம் வீராபுரம் பகுதியைச் சார்ந்த கோடீஸ்வரன் என்பவர் தனது இடத்தை ஆவணம் செய்து தருமாறு ஆவடி இணை சார் பதிவாளர் அமுல்ராஜ் இடம் கடந்த 19தேதி ஆவணம் பதிவு செய்துள்ளார். இந்நிலையில் ஆவணம் பெறுவதற்கு அமுல்ராஜ் 1 லட்சம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. பணம் கொடுக்காததால் ஆவணம் தருவதற்கு அமுல்ராஜ் காலதாமதம் செய்து வந்துள்ளார். இதனிடையில் தென்னரசு என்பவர் தனிகா சாய் எண்டர்பிரைசஸ் எனும் கடையை சார் பதிவாளர் அலுவலகம் அருகிலே நடத்தி வருகிறார் . இதில் அனைத்து விதமான ஆவணங்களும் வில்லங்கச் சான்று பத்திரப்பதிவு போன்ற பணிகளை செய்து வருவதாகவும், தான் இடைத்தரகர் என கோடீஸ்வரனை அணுகி உங்களுக்கு உங்களுடைய இடத்திற்கான ஆவணங்களை பெற்றுத் தருவதாகவும், சார் பதிவாளரிடம் நான் அனுகி உங்களுக்காக ஆவணம் பெற்று தருவதாக கூறியுள்ளார்.

காலதாமத்தின் காரணமாக கோடீஸ்வரன் பணத்தை கொடுக்க முடிவு செய்து லஞ்ச ஒழிப்பு துறைக்கு தகவல் அளித்து இன்று மாலை சுமார் 4.15மணி அளவில் தென்னரசிடம் பணத்தை கொடுத்து அனுப்பி உள்ளார். தென்னரசு அமுல்ராஜ் இடம் பணம் கொடுக்கும் போது கையும் களவுமாக லஞ்ச ஒழிப்புத்துறை
ஆய்வாளர் தமிழரசி தலைமையில் கொண்ட குழு அமுல்ராஜை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

MUST READ