spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்ஆவடிஏ வி என் எல் 2 வது ஆண்டு நிறுவன தின கொண்டாட்டம்

ஏ வி என் எல் 2 வது ஆண்டு நிறுவன தின கொண்டாட்டம்

-

- Advertisement -

AVNL ராணுவ தளவாட நிறுவனம் மூலம் 5000 கோடிக்கு மேல் வருவாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக சஞ்சய் திவேதி ஏ வி என் எல் நிறுவன இயக்குனர் செய்தியாளர்களுக்கு பேட்டி

 ஏ வி என் எல் 2 வது ஆண்டு நிறுவன தின கொண்டாட்டம் திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் உள்ள AVNL ராணுவ ஆயுத தளவாட உற்பத்திகள் தொழிற்சாலை தனியார் மயமாக்கப்பட்டு 2 வது ஆண்டு நிறுவன தினம் கொண்டாடப்பட்ட விழாவில் சி.எம்.டி ஸ்ரீ சஞ்சய் திவேதி, இயக்குநர்/நிதி ஸ்ரீ சி ராமச்சந்திரன் மற்றும் இயக்குநர்/எச்ஆர் ஸ்ரீ பி பட்டநாயக் ஆகியோர் உரையாற்றினர். ஏவிஎன்எல் நிறுவனத்தின் பல்வேறு செயல்பாடுகள் மற்றும் அதன் சாதனைகள் நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்பட்டன.நிறுவன தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட AVNL விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்கள் இதன் போது கௌரவிக்கப்பட்டனர்.ராணுவ ஆயுத தொழிற்சாலை வாரியத்தின் ஓய்வு பெற்ற உறுப்பினர்கள் மற்றும் DGQA மற்றும் அதற்கு கீழ் செயல்படும் நிறுவனங்களின் விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.

ஏவிஎன்எல் ன் அதிகாரப்பூர்வ இணையதளம் தொடங்கப்பட்டது. அதில் ஏவிஎன்எல் பற்றிய முழு விவரங்கள் ராணுவ தளவாட உற்பத்தியின் விவரங்கள் மற்றும் வேலை வாய்ப்புகள் உள்ளிட்டவைகள் இதில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீமதி தலைமையில் AVNL இன் WWA திவேதி, தலைவர் மற்றும் இணைத் தலைவர் ஸ்ரீமதி. தீப்திமாயி பட்டநாயக்கும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு விருந்தினர்களை கௌரவித்தார்.

we-r-hiring

இந்திய கலாசாரத்தை விளக்கும் கலாசார நிகழ்ச்சியும் வண்ண மயமான நடன நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது.ஏவிஎன்எல் க்கு சேவை வழங்கிய அனைத்து விருந்தினர்களும் 2 ஸ்தாபக தினத்தில் கௌரவிக்கப்பட்டனர். WWA AVNL இன் செயல்பாடுகளும் காட்டப்பட்டன. ஸ்வச்சதா ஹி சேவா மைதானத்தில் மரம் வளர்ப்பு மற்றும் ஸ்வச் பாரத் ஆகியவற்றைத் தொடர்ந்து நன்றியுரையுடன் அடித்தள நாள் விழா நிறைவடைந்தது.

 ஏ வி என் எல் 2 வது ஆண்டு நிறுவன தின கொண்டாட்டம் நிகழ்ச்சியில் பேசிய சஞ்சய் திவேதி ராணுவ ஆயுத தளவாட உற்பத்தி தொழிற்சாலையில் இந்திய ராணுவம் இந்திய விமானப்படை இந்திய கடற்படை உள்ளிட்ட உள்ளிட்டவைகளுக்கு தரமான உறுதியான வாகனங்களை வழங்கி வருகிறோம் சென்ற ஆண்டு இந்த நிறுவனம் ஈட்டிய வருவாய் 3,300 கோடியாகவும் மேலும் முழுக்க முழுக்க இந்திய தொழில்நுட்பத்தையே பயன்படுத்தி வாகனங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது என்றும் ராணுவ தளவாட பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்.

AVNL ராணுவ தளவாட நிறுவனம் மூலம் 5000 கோடிக்கு மேல் வருவாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே தயாரிக்கும் ராணுவ தளவாட உதிரி பாகங்கள் மூலம் அதிநவீன போர் வாகனங்களை உற்பத்தி செய்து வருகிறோம் என்வும். உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ராணுவ தளவாட உற்பத்திக்கு இந்த நிறுவனம் அதிக அளவில் தனது பங்களிப்பை வழங்கி உள்ளதாகவும் சென்ற ஆண்டில் மட்டும் 5 ஆயிரம் கோடிக்கு மேல் வருவாய் ஈட்டி உள்ளதாகவும், தங்கள் நிறுவனத்தில் 11ஆயிரம் தொழிலாளர்கள் பணி புரிந்து கொண்டிருப்பதாகவும் மேலும் உற்பத்தியை அதிகப்படுத்தி வேலைவாய்ப்பு தருவதற்கும், ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

 ஏ வி என் எல் 2 வது ஆண்டு நிறுவன தின கொண்டாட்டம் இதுவரை புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உள்நாட்டிலேயே அதிநவீன ராணுவ வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.மேலும் மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் ஆத்ம நிர்பர் பாரத் தற்சார்பு இந்தியா இலக்கை அடைந்து வருகிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் அந்நிறுவனத்தின் நிதி இயக்குனர் ராமச்சந்திரன் மனிதவள இயக்குனர் பட்நாயக் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர், இதனைத் தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் பரத நாட்டிய கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

MUST READ