ஆவடி காவல் ஆணையரகத்தில் மாபெரும் போதை விழிப்புணர்வு கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
கடந்த 8 நாட்களாக 64 அணிகள் மோதியதில் வெற்றி பெற்ற மூன்று அணிகளுக்கு கோப்பைகளும் ரொக்க பரிசும் ஆவடி காவல் ஆணையாளர் கி. சங்கர் வழங்கினார்.

ஆவடி காவல் ஆணையரகம் சார்பாக இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் இடையே போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தி நல்வழிபடுத்தும் நோக்கத்ல் மாபெரும் கிரிகெட் போட்டி கடந்த 11.08.2024 அன்று காவல் ஆணையாளர் கி.சங்கர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.
இப்போட்டியில் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்ற 64 அணிகளும் காவல் துறையை சேர்ந்த 16 அணிகளும் கலந்துக் கொண்டு விளையாடி வந்தனர்.
இந்நிலையில் இறுதி சுற்றுக்கு இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் பிரிவில் FRIENDS CC மற்றும் M4 BOYS அணிகளும், காவல் துறை பிரிவில் RC AVADI மற்றும் SPORTS TEAM (POLICE) விளையாடினர்.
இன்று (18.08.2024) போட்டி ஆவடி காவல் ஆணயைரக ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்று முடிந்த நிலையில் இறுதி போட்டியில் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் பிரிவில் FRIENDS CC அணி முதல் இடத்தையும், M4 BOYS அணி இரண்டாம் இடத்தையும், JOLLY BROTHERS அணி மூன்றாம் இடத்தையும், BLACK BULLS அணி நான்காம் இடத்தையும் பிடித்தன.
ஆவடி மாநகராட்சியில் வெள்ள தடுப்பு பணிகள்… முன்னாள் அமைச்சர் நாசர் நேரில் பார்வையிட்டு ஆய்வு
மேலும் காவல் துறை பிரிவில் வெற்றி பெற்ற RC AVADI அணி முதல் இடத்தையும் SPORTS TEAM (POLICE) அணி இரண்டாம் இடத்தையும் பிடித்தது.
ஆவடி காவல் ஆணையாளர் கி.சங்கர்,அவர்கள் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகளும் காசோலைகளும் வழங்கி கௌரவப்படுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வு பாடலையும் பாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்,மற்றும் இறுதி நாளான இன்று விருந்தினர் அணியாக கலந்து கொண்ட விஜய் டிவி பிரபலம் மாகாபா ஆனந்த் மற்றும் அவரது அணியினர் கலந்து கொண்டு போதைக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தும் கிரிக்கெட் விளையாடியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிகழ்ச்சியில் ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் பணியாற்றும் உயர் அதிகாரிகளும் காவலர்களும் பங்கேற்றனர்.