Homeசெய்திகள்ஆவடிஇம்மானுவேல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி-இன்ஃபண்ட் ஜீசஸ் நர்சரி பிரைமரி பள்ளி இணைந்து நடத்திய-வளரும் விஞ்ஞானிகளின் அறிவியல் கண்காட்சி

இம்மானுவேல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி-இன்ஃபண்ட் ஜீசஸ் நர்சரி பிரைமரி பள்ளி இணைந்து நடத்திய-வளரும் விஞ்ஞானிகளின் அறிவியல் கண்காட்சி

-

- Advertisement -

மாணவர்களின் அறிவியல் கண்காட்சி பார்வையாளர்கள் வியக்கும் விதத்தில் நடைபெற்றது

ஆவடி அடுத்த பட்டாபிராம் பகுதியில் இம்மானுவேல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, இன்ஃபண்ட் ஜீசஸ் நர்சரி பிரைமரி பள்ளி, இணைந்து மாணவ மாணவியர்கள், அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

இம்மானுவேல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி-இன்ஃபண்ட் ஜீசஸ் நர்சரி பிரைமரி பள்ளி இணைந்து நடத்திய-வளரும் விஞ்ஞானிகளின் அறிவியல் கண்காட்சி இக்கண்காட்சியில் சிறப்பு விருந்தினராக ஹிந்துஸ்தான் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் துணைவேந்தர் மற்றும் சென்னை கிறிஸ்துவ கல்லூரியின் முன்னாள் முதல்வர், டாக்டர். அலெக்ஸாண்டர் ஜேசுதாஸன் கலந்து கொண்டு மாணவர்களின் அறிவுத்திறன் படைப்பாற்றல் கண்காட்சியை கண்டு பாராட்டினர்.மேலும் இக்கண்காட்சியில் 1000-த்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவியர்கள் மற்றும் பெற்றோர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு மகிழ்ச்சியோடு கண்காட்சியை கண்டு களித்தனர்.

இக்கண்காட்சியில் 500-க்கும் மேற்பட்ட புதுமையான அறிவியல் திட்டங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த நிலையில் மாணவர்கள் தங்கள் சோதனைகள் மற்றும் ஆக்கப்பூர்வமான அறிவியல் தீர்வுகள் மூலம் பார்வையாளர்களை கவர்ந்தனர்.இந்த அறிவியல் கண்காட்சி மாணவர்களின் தனித்திறன் மற்றும் தொழில் நுட்பம் பற்றிய புரிதல் மாணவ மனங்களின் ஆய்வுக்கு இக்கண்காட்சி ஒரு சான்றாக விளங்கியது. மேலும் வளரும் விஞ்ஞானிகள் பிரகாசிக்க இது வழி வகுக்கிறது.

இம்மானுவேல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி-இன்ஃபண்ட் ஜீசஸ் நர்சரி பிரைமரி பள்ளி இணைந்து நடத்திய-வளரும் விஞ்ஞானிகளின் அறிவியல் கண்காட்சி இந்நிகழ்ச்சியில் இவ்வளாகத்தை அலங்கரிக்க மறுசுழற்சி செய்யப்பட்ட பொருள்கள் பயன்படுத்தியிருந்தது. பார்ப்பவர் கண்கவரும் விதமாக இருந்தது.மேலும் விவசாயம் பண்ணை அமைப்பு, இஸ்ரோ மாதிரி, வேடிக்கை மண்டலங்கள் மற்றும் மாணவர்களின் அறிவாற்றலை மேம்படுத்தும் வகையில் விளையாட்டு அரங்கங்களும் அமைக்கப்பட்டிருந்தன.

இதில் புதிய கண்ணோட்டமாக மாணவர்கள் இரு சக்கர வாகனத்தில் இருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்து அதில் மின்விசிறி மற்றும் மின்விளக்கு மொபைல் சார்ஜர் ஆகியவற்றை பயன்படுத்தி காட்டினர்.மேலும் நெருப்பைக் கொண்டு மின்சாரம் தயாரித்து மக்களுக்கு பயன்படும் வகையில் செய்யலாம் அதன் மாதிரி ஓட்டமாக மெழுகுவர்த்தி நெருப்பைக் கொண்டு மின்சாரம் உற்பத்தி ஆவதை செய்து காண்பித்தனர்.தேவையற்ற பொருட்களை எரிய வைத்தால் அதிலிருந்து மின்சாரத்தை தயாரித்து பொதுமக்களுக்கு விநியோகம் செய்யலாம் அரசு உதவி செய்தால் இதை பெரிதாக செய்து காண்பித்து பயன்படுத்துவோம் என மாணவர்கள் கூறியது வியப்பளிக்கும் விதமாகவும்,அவர்களின் அறிவுத்திறனை எல்லோரும் பாராட்டும் விதமாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

MUST READ