Homeசெய்திகள்ஆவடிகேரளா குண்டு வெடிப்பு எதிரொலி-போலீசார் தீவீர சோதனை

கேரளா குண்டு வெடிப்பு எதிரொலி-போலீசார் தீவீர சோதனை

-

- Advertisement -

ஆவடி இருப்புப்பாதை போலீசார் ரயில் நிலைலையங்களில் சல்லடை போட்டு தீவீர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கேரளா குண்டு வெடிப்பு எதிரொலி அரக்கோணம், திருவள்ளூர் சென்ட்ரல் மார்க்கத்தில்,ஆவடி ,அம்பத்தூர் ,பெரம்பூர் உள்ளிட்ட புறநகர் ரயில் நிலையத்தில் ரயில்வே இருப்புப்பாதை காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு.

கேரளா குண்டு வெடிப்பு எதிரொலி-போலீசார் தீவீர சோதனைகேரளாவில் கிறிஸ்தவ மதத்தினரின் கன்வென்ஷன் கூட்டத்தில் குண்டு வெடித்து உயிரிழப்பு மற்றும் படுகாயங்கள் ஏற்பட்ட நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆவடி ,பட்டாபிராம்,அம்பத்தூர்,பெரம்பூர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய புறநகர் ரயில் நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான பயணிகளிடம் ரயில்வே போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஞாயிற்றுக்கிழமை கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் பயணிகள் பெண் பயணிகள் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்ய திருவள்ளூரில் இருந்து ஆவடி அம்பத்தூர் மார்க்கமாக சென்ட்ரல் செல்லும் ஓடும் ரயில்களிலும் அதேபோல் ஆவடியில் இருந்து அரக்கோணம் செல்லும் ரயில்களிலும் ரயில் நிலையங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

கேரளா குண்டு வெடிப்பு எதிரொலி-போலீசார் தீவீர சோதனைகுறிப்பாக பெரம்பூரில் நின்ற பெங்களூரு விரைவு ரயிலிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது .இந்த சோதனையில் ரயில்வே இருப்புப் பாதை ஆய்வாளர் பத்மனாபன் தலைமையில் உதவி ஆய்வாளர் ஜூட்சன்,உதவி ஆய்வாளர் சுந்தர்ராஜன் உள்ளிட்ட காவலர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறனர்..

MUST READ