Homeசெய்திகள்ஆவடிரூ.6,500 கோடி திட்டமதிப்பில் கோயம்பேடு - பட்டாபிராம் வரை மெட்ரோ ரயில் திட்டம் துவக்கம்

ரூ.6,500 கோடி திட்டமதிப்பில் கோயம்பேடு – பட்டாபிராம் வரை மெட்ரோ ரயில் திட்டம் துவக்கம்

-

- Advertisement -

கோயம்பேடு முதல் ஆவடி வரை மெட்ரோ  ரயில் திட்டத்தை நீட்டிப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பு பணி இம்மாதம் நிறைவடையும் என்றும்,  இந்த வழித்தடத்தை பட்டாபிராம் வரை நீட்டிப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வையும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மேற்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2023  செப்டம்பர் மாதத்தில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் இரண்டாம் கட்ட திட்டத்தின் கீழ்  மாதவரம் – சோழிங்கநல்லூர் வழித்தடத்தின் ஒரு பகுதியாக  கோயம்பேடு முதல் ஆவடி வரை  நீட்டிப்பது குறித்த விரிவான சாத்தியக்கூறு அறிக்கையை (DFR) சமர்ப்பித்த பிறகு, மெட்ரோ ரயில் நிறுவனம் கடந்த ஆண்டு ஜூலை 2024 இல் RITES நிறுவனத்திடம்  விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பு பணிகளை ஒப்படைத்தது.

ரூ.6,500 கோடி திட்டமதிப்பில் கோயம்பேடு - பட்டாபிராம் வரை மெட்ரோ ரயில் திட்டம் துவக்கம்இது தொடர்பாக பேசிய மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரி ஒருவர்,  மெட்ரோ ரயில் வழித்தடத்தை ஆவடி வரை நீட்டிப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பு பணி இறுதி கட்டத்தில் உள்ளதாகவும்,  பட்டாபிராம் வரை இதனை நீட்டிப்பதற்கான சாத்தியக்கூறுகள் பரிந்துரைப்படி ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். பீக் ஹவர் பீக் டைரக்ஷன் (PHPD) போக்குவரத்து ஒரு மணி நேரத்திற்கு 12,000 பயணிகளை எட்டுவதாகவும், சாத்தியமானால், அறிக்கை  ஒரு மாதத்தில் அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

கோயம்பேடு முதல் ஆவடி வரையிலான தோராயமான மெட்ரோயில் பாதை நீளம் 16.1 கி.மீ. ஆகும். இது பட்டாபிராம் வரை நீட்டிக்கப்பட்டால் கிட்டத்தட்ட 20 கிமீ ஆக அதிகரிக்கும். இத்திட்டத்திற்கு ரூ. 6,500 கோடி மதிப்பிலான கட்டுமானச் செலவாகும்.

கோயம்பேடு – ஆவடி வழித்தடத்தில சுமார் 15 உயர்த்தப்பட்ட நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இத்திட்டம் பட்டாபிராம் வரை நீட்டிக்கப்பட்டால் கூடுதல் நிலையங்கள் அமைக்கப்படும் என்று மெட்ரோ  அதிகாரி கூறினார்.  மேலும்,, ஆவடியில் அல்லது பட்டாபிராம் மத்தில் வெளிவட்டச் சாலை (ஓஆர்ஆர்) அருகே உள்ள காலி இடத்தில் மெட்ரோ ரயில் டிப்போ கட்டப்படும் என்றும் அவர் கூறினார்.

கோயம்பேடு – ஆவடி மெட்ரோ ரயில் வழித்தடத்தில் பாடி புதுநகர், வாவின், அம்பத்தூர் எஸ்டேட் பேருந்து நிலையம், அம்பத்தூர் ரயில் நிலையம், திருமுல்லைவாயல், ஆவடி ரயில் நிலையம் மற்றும் திருமங்கலம் அல்லது முகப்பேரில் உள்ள ஒரு நிலையம் ஆகியவை இந்த நீட்டிப்பில் இருக்கும் சில முக்கியமான நிலையங்களாகும் என தெரிவித்துள்ளார்.

MUST READ