Homeசெய்திகள்ஆவடிகால்வாயில் மூழ்கி மாணவன் பலி

கால்வாயில் மூழ்கி மாணவன் பலி

-

நண்பர்களுடன் கால்வாய்க்கு குளிக்க சென்ற மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

கால்வாயில் மூழ்கி மாணவன் பலி சென்னை அயனாவரம் கே.கே.நகரைச் சேர்ந்தவர் குமார் ஆட்டோ ஓட்டுனர். இவரது மகன் லோகேஸ்வரன் 17. அயனாவரம் அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பயின்று வந்தார்.பள்ளி விடுமுறை என்பதால், நேற்று மாலை வீட்டிலிருந்து நண்பர்கள் 5 பேருடன் ஆவடி கோவில்பதாகை  கணபதி நகர் அருகில் உள்ள கிருஷ்ணா கால்வாயில் குளிக்கச் சென்றார்.

அப்போது, லோகேஸ்வரன் கால்வாய் பாலத்தில் இருந்து தண்ணீரில் குதித்து விளையாடும் போது நீரில் மூழ்கி அடித்து செல்லப்பட்டார். தகவல் அறிந்த ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் மற்றும் ஆவடி தீயணைப்புத் துறையினர் பல இடங்களில் தேடியும் லோகேஸ்வரன் கிடைக்கவில்லை.

இரவு நேரமானதால் போலீசார் தேடுதல் பணியை முடித்து திரும்பி சென்றனர். லோகேஸ்வரனை தேடும் பணி இன்று காலை மீண்டும் துவங்கபட்டுள்ளது.

MUST READ