சென்னை திருவொற்றியூரில் காலடிப்பேட்டை பகுதியில் நூறாண்டு பழமை வாய்ந்த புனித தூய பவுல் பள்ளியில் 2008 மற்றும் 2010 ல் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவ மாணவியர்கள் ஒன்றிணைந்து சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தூய பவுல் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் பழைய மாணவ மாணவியர்களின் மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் பங்கேற்றனர்.
15 ஆண்டுகளுக்குப் பிறகு நண்பர்களையும், தோழிகளையும் பல்வேறு கோணத்தில் குடும்பமாக கண்ட நண்பர்கள் உற்சாகமாக வரவேற்றனர். முன்னதாக பள்ளியில் படித்த மாணவன் நடன கலை நிகழ்ச்சி மூலமாக திரைப்பட பாடலுக்கு நடனமாடி அசத்தினார். இதனை அடுத்து பெண்களும் தங்கள் பங்குக்கு ஒவ்வொரு பாடலுக்கு நடனம் ஆடினர். இதில் தாய் மகள் இருவரும் சேர்ந்து நடனம் ஆடியது நண்பர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.
ஒவ்வொரு ஆசிரியர்களையும் நினைவுகூர்ந்து அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கி காலில் விழுந்து மரியாதை செலுத்தினர். இதனை அடுத்து குடும்பம் குடும்பமாக வந்த நண்பர்கள் நீண்ட நாட்கள் கழித்து சந்திப்பதால் செல்பி எடுத்தும் கட்டிப்பிடித்தும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இதில் பெண்கள் கர்ப்பிணியாகவும், பிள்ளைகளை கையில் சுமந்தும் தங்கள் குடும்பத்தினருடன் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். ஆசிரியர்கள் பாடம் நடத்தும் பொழுது கண்டித்ததையும் தண்டித்ததையும் நினைவு கூர்ந்து அவர்கள் அடித்த அடி இன்னும் நினைவிருப்பதாக கூறியதை அடுத்து ஆசிரியர் அந்த இடத்தில் ஆதரவாக தழுவி கொடுத்தது நிகழ்ச்சியை ஏற்படுத்தியது.
இதனை அடுத்து ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் குழுக்களாக நினைவு புகைப்படங்களை எடுத்துக் மகிழ்ச்சி பொங்க உற்சாக கூச்சலிட்டனர். 15 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திக்கும் நண்பர்கள் பல்வேறு துறைகளில் உயர் பதவிகளை வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.