Homeசெய்திகள்சென்னைகால்வாயில் மூழ்கிய சொகுசு கார்- சென்னையில் பரபரப்பு

கால்வாயில் மூழ்கிய சொகுசு கார்- சென்னையில் பரபரப்பு

-

- Advertisement -

கால்வாயில் மூழ்கிய சொகுசு கார்- சென்னையில் பரபரப்பு

சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை, ஸ்ரீபெரும்புதூரில் கார் கால்வாயில் மூழ்கி விபத்துக்குள்ளானது.

Car

தேசிய நெடுஞ்சாலையில் சென்னை நோக்கி அதிவேகமாக வந்த கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனில் மோதி தேசிய நெடுஞ்சாலை சாலை விரிவாக்க பணிக்காக சிறுபாலம் அமைக்க இருந்த கால்வாயில் மூழ்கியது. பொதுமக்கள் தேசிய நெடுஞ்சாலையில் அதிக அளவில் கூடியதால் ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார்ம் கூட்டத்தை கட்டுபடுத்தி கால்வாயில் மூழ்கி கிடந்த காரை மீட்டனர்.

விசாரணையில் காஞ்சிபுரத்தில் இருந்து 3 பேர் ஆவடி சென்ற போது விபத்து நேர்ந்ததும், மது போதையில் ஆவடியை சேர்ந்த அர்ஜூன்(24) என்பவர் ஓட்டி வந்ததும் ஸ்ரீபெரும்புதூர் அருகே சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக சென்ற போது சென்டர் மீடியனில் மோதி கார் கால்வாயில் விழுந்ததும் தெரியவந்தது. கார் கால்வாயில் விழுவதற்குள் 3 பேரும் காரில் இருந்து இறங்கி விட்டதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. ஸ்ரீபெரும்புதூர் போக்குவரத்து போலீஸார் அர்ஜூன் மீது வழக்கு விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

 

MUST READ