spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைதூய்மைப் பணியாளர்களுக்கு தேநீர் வாங்கிக் கொடுத்த மு.க.ஸ்டாலின்

தூய்மைப் பணியாளர்களுக்கு தேநீர் வாங்கிக் கொடுத்த மு.க.ஸ்டாலின்

-

- Advertisement -

தூய்மைப் பணியாளர்களுக்கு தேநீர் வாங்கிக் கொடுத்த மு.க.ஸ்டாலின்தூய்மைப் பணியாளர்களுக்கு தேநீர் வாங்கிக் கொடுத்து உற்சாகப்படுத்திய  மு.க.ஸ்டாலின்

ஆய்வின்போது தூய்மைப் பணியாளர்களுக்கு அருகில் உள்ள தேநீர் கடையில் தேநீர் வாங்கிக் கொடுத்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உற்சாகப்படுத்தினார்.

we-r-hiring

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை பெரம்பூரில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு முன்களப் பணியாளர்களை தேநீர் கடைக்கு அழைத்துச் சென்று தேநீர் வழங்கி அவர்களுடன் உரையாடினார்.
தூய்மைப் பணியாளர்களுக்கு தேநீர் வாங்கிக் கொடுத்த மு.க.ஸ்டாலின்இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (அக்.15)  மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்துள்ளார்.

சென்னை புளியந்தோப்புப் பகுதியில் மழைநீர் அகற்றும் பணியில் மும்முரமாக ஈடுபட்டிருந்த 15-க்கும் மேற்பட்ட முன்களப் பணியாளர்களைப் பாராட்டியுள்ளார். அவர்களை அருகிலிருந்த தேநீர் கடைக்கு அழைத்துச்சென்று அவர்களுக்கு டீ-பிஸ்கட் வாங்கித்தந்து ஊக்கப்படுத்தி உற்சாகமளித்துள்ளார்.

தமிழக முதலமைச்சரின் இந்த செயலை முன்களப் பணியாளர் அனைவரும் வியந்து வெகுவாகப் பாராட்டியுள்ளார்கள். முதல்வரே, தங்களை அழைத்துச்சென்று தேநீர் வாங்கித்தந்து உற்சாகப்படுத்தியது அவரது பெருந்தன்மையையும் மனித நேயத்தையும் புலப்படுத்துகின்றன என தெரிவித்துள்ளனர்.

முதலமைச்சர் அளித்துள்ள ஊக்கம் மேலும் தங்களை பணியில் மிகுந்த ஆர்வமுடன் தொடர்ந்து ஈடுபட வழிவகுக்கும் என கூறியுள்ளனர்.

தமிழக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் உத்தரவுப்படி, வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளுக்கென பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் 21,000 பணியாளர்கள் சுழற்சி முறையில் 15 மண்டலங்களிலும் பணி செய்கின்றனர். அதே போன்று சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் சார்பில் 2,149 பணியாளர்கள், தமிழ்நாடு மின்வாரியம் சார்பாக சென்னையில் 5,000க்கும் மேற்பட்ட மின்களப் பணியாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் 1,000 இடங்களில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு பொதுமக்களுக்கு இலவசமாக மருத்துவ உதவிகள் அளிக்கப்படுகிறது”’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவாலய ‘War Room’ :  இரவு முழுவதும் விழிப்புடன் பணியாற்ற கழக நிர்வாகிகளுக்கு உத்தரவு – முதலமைச்சர்

 

MUST READ