உடல் நலம் குன்றிய முதியவர் தெரு நாய்கள் கடித்ததில் உயிரிழந்துள்ளார். அரும்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை அரும்பாக்கம் திருவள்ளுவர் நகர் வாசுகி தெருவில் வசித்து வந்தவர் சுப்பிரமணி (80). கட்டிட வேலை செய்து வந்த இவருக்கு திருமணம் ஆகவில்லை.வயது முதிர்வு காரணமாக இவருக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டது.கடந்த மூன்று தினங்களாக உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருந்துள்ளது.
இந்த நிலையில் வீட்டின் போர்டிகோவில் படுத்திருந்த சுப்பிரமணியை நேற்று இரவு 2 தெரு நாய்கள் கடித்துக் கொண்டு இருந்துள்ளன. சத்தம் கேட்டு ஓடிவந்த பக்கத்து வீட்டுக்காரர் ராணி நாய்களை விரட்டிவிட்டு முதியவர் அருகில் சென்று பார்த்தபோது முதியவர் பரிதாபமாக இறந்து கிடந்துள்ளார்.
சடலத்தை கைப்பற்றிய அரும்பாக்கம் போலீசார் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவம் தொடர்பாக அரும்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
‘மரியாதைக்காகத்தான் ராமதாஸூக்கு அழைப்பு’: முறுக்கும் திமுக- மறுக்கும் பாமக