spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்வேலூரில் மூளைச்சாவடைந்த இளைஞரின் இதயம் 90 நிமிடங்களில் சென்னையிலுள்ள பெண்ணுக்கு பொருத்தம்

வேலூரில் மூளைச்சாவடைந்த இளைஞரின் இதயம் 90 நிமிடங்களில் சென்னையிலுள்ள பெண்ணுக்கு பொருத்தம்

-

- Advertisement -

வேலூரில் விபத்தில் மூளைச்சாவடைந்த இளைஞரின் இதயம் 90 நிமிடங்களில் சென்னையிலுள்ள பெண்ணுக்கு பொருத்தம்

வேலூரில் விபத்தில் மூளைச்சாவடைந்த 20 வயது இளைஞரிடம் தானமாக பெறப்பட்ட இதயம் 90 நிமிடங்களில் உயிர் காக்கும் மாற்று அறுவை சிகிச்சைக்காக ராணிப்பேட்டையில் இருந்து சென்னை தனியார் மருத்துவமனைக்கு வெற்றிகரமாக கொண்டு செல்லப்பட்டு இதய செயலிழப்பால் பாதிக்கப்பட்ட 34 வயது பெண்ணுக்கு பொருத்தப்பட்டுள்ளது.

we-r-hiring

எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனை

இதுகுறித்து சென்னை  எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனை  செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது, “வெள்ளிக்கிழமை காலை 11.07 மணிக்கு வேலூரிலிருந்து இதயத்துடன் புறப்பட்ட மருத்துவக் குழுவினர், சாலை மார்க்கமாக பகல் 12.35 மணிக்கு சென்னை வந்தனர் என தெரிவித்துள்ளது.

மருத்துவ நிபுணர்களின் ஒருங்கிணைந்த முயற்சிகள் மற்றும்  போக்குவரத்து அதிகாரிகளின் ஆதரவின் மூலம் இந்த அறுவை சிகிச்சை சாத்தியமானது என  தெரிவித்துள்ளது.

இதயம் மற்றும் நுரையீரல் மாற்று சிகிச்சை குழு, கே.ஆர். பாலகிருஷ்ணன், காஞ்சிபுரம், சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதூர், மதுரவாயல் மற்றும் கோயம்பேடு வழியாக விரைவான ஒரு வழியைத் தேர்ந்தெடுத்து சீக்கிரமாக சென்றடைய  உறுதி செய்துள்ளார் , என தெரிவித்துள்ளனர்.

MUST READ