Homeசெய்திகள்சென்னைஇரு சக்கர வாகனம் நான்கு சக்கர வாகனத்தில் மோதி ஒருவர் பலி

இரு சக்கர வாகனம் நான்கு சக்கர வாகனத்தில் மோதி ஒருவர் பலி

-

இருசக்கர வாகனத்தில் வந்த நபர் நான்கு சக்கர வாகனத்தில் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இரு சக்கர வாகனம் நான்கு சக்கரவாகனத்தில் மோதி ஒருவர் பலி ஆவடி அடுத்து சேக்காடு வி.ஜி.என் குடியிருப்பு பகுதியை சேர்ந்த மனோஜ் குமார் (31) மத்திய உளவுத்துறை செக்யூரிட்டி உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி வைஷாலி (26) என்ற மனைவியும் நேசன் (2) என்ற ஆண் குழந்தை உள்ளனர்.

நேற்று மாலை இவரது நண்பர் குடும்ப விழாவிற்கு சென்று விட்டு, இவரது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பும் போது திருவேற்காட்டில் இருந்து பருத்திப்பட்டு செல்லும் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, எதிரே ஆவடியில் இருந்து திருவேற்காடு நோக்கி செல்லும் நான்கு சக்கர வாகனம் இவர் மீது மோதியதில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.இதைக் கண்ட நான்கு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் சம்பவ இடத்திலிருந்து இருந்து தப்பி சென்றனர்.

இரு சக்கர வாகனம் நான்கு சக்கரவாகனத்தில் மோதி ஒருவர் பலி அங்கிருந்த பொதுமக்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த 108 மருத்துவர்கள் இவரை பரிசோதனை செய்ததில் ஏற்கனவே  உயிரிழந்தது தெரிய வந்தது.சம்பவ இடத்திற்கு வந்த ஆவடி போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து இவரது உடலை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து அந்த நான்கு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

MUST READ