Homeசெய்திகள்சென்னைசெம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஏரிகளில் இருந்து தண்ணீர் திறப்பு... கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!

செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஏரிகளில் இருந்து தண்ணீர் திறப்பு… கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!

-

- Advertisement -

செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஏரிகளில் உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஏரிகளில் இருந்து தண்ணீர் திறப்பு... கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!

we-r-hiring

சென்னையில் கனமழை காரணமாக செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஏரிகளில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் உபரிநீர் கால்வாய் அருகே வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், படிப்படியாகவும் பாதுகாப்பாகவும் தண்ணீர் திறக்கப்படுவதால், ஊருக்குள் வெள்ளம் ஏற்படும் வாய்ப்புகள் இல்லை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். டிட்வா புயல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்த நிலையில், நிலப்பகுதியைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 22 அடியை எட்டியதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வினாடிக்கு 200 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த ஏரிக்கு வினாடிக்கு 1,330 கன அடி நீர்வரத்து உள்ளது. புழல் ஏரியில் நீர் திறப்பு 500 கன அடியாகவும், பூண்டி ஏரியில் 200 கன அடி உபரிநீரும் திறக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழை காரணமாகவே இந்த ஏரிகளில் இருந்து உபரிநீர் திறக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வானிலை ஆய்வு மையம், இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எச்சரித்துள்ளது. நேற்று இரவு அரும்பாக்கம், கோயம்பேடு, காசிமேடு, ராயப்பேட்டை, கிண்டி, வடபழனி, திருவொற்றியூர், எண்ணூர், தேனாம்பேட்டை, அண்ணா சாலை, மெரினா கடற்கரை, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம் போன்ற பகுதிகளில் இரவு முழுவதும் மழை பெய்தது. அதிகாலையில் பெய்த விடாத மழையால் ஏற்பட்ட தண்ணீர் வேகமாக வடிந்துவிட்டதாகவும், காலை 9 மணியில் இருந்து மீண்டும் மழை பெய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இராமநாதபுரம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கடலூர் மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விழுப்புரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை மாவட்டங்களில் சில இடங்களிலும் கனமழை பெய்து வருவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம், சென்னைக்கு 100 கி.மீ தூரத்தில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், மணிக்கு 3 கி.மீ வேகத்தில் தெற்கு தென்மேற்கு திசையில் மெதுவாக நகர்வதாகவும், அடுத்த 6 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. டிட்வா புயல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து, தற்போது பகுதி அளவில் நிலப்பகுதிக்குள் நகர்ந்துள்ளதால், சென்னை, குறிப்பாக காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு பகுதியில் இடியுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்க்கிறது. அதிகாலை 2.30 மணி வரை காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு பகுதியில் சிறப்பான மழை பதிவானது. தென் சென்னையில் நீண்ட நாட்களாக காத்திருந்த மழையும் தற்போது பரவலாக பொழிந்து வருகிறது என்றும், வருகை தந்த மழை தொடரக்கூடும் என தமிழ்நாடு வெதர்மேன் குறிப்பிட்டுள்ளாா்.

தமிழக அரசியல் கவிழ்ந்து படுத்த அமித்ஷா! கையை பிசையும் ஆர்.எஸ்.எஸ்! பீஸ்பீசான வாக்கு வங்கி!

MUST READ