நடிகர் அல்லு அர்ஜுன் தெலுங்கு திரையுலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர். இவரது நடிப்பில் கடந்த டிசம்பர் 5ஆம் தேதி வெளியான புஷ்பா 2 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று சுமார் ரூ. 1500 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது. இதற்கிடையில் திரையரங்கில் கூட்ட நெரிசலில் சிக்கி உயர்ந்த பெண் விவகாரத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டார். பின்னர் சில மணி நேரங்களில் அல்லு அர்ஜுனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அல்லு அர்ஜுனுக்கு எதிராக ரேவந்த் ரெட்டி பேசியது, அல்லு அர்ஜுன், தனது நற்பெயரை கெடுக்க சிலர் முயற்சிக்கிறார்கள் என செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தது, அதன் பிறகு அல்லு அர்ஜுன் வீட்டின் மீது சிலர் தாக்குதல் நடத்தியது, அல்லு அர்ஜுனுக்கு எதிராக காவல்துறையினர் ஆதாரங்களை வெளியிட்டது, இவ்வாறு இந்த பிரச்சனை ஓயாமல் தொடர்ந்து சென்று கொண்டிருக்கிறது.
இந்நிலையில் தான் உயிரிழந்த பெண் விவகாரத்தில் சிக்கட்பள்ளி காவல் நிலையத்தில் அல்லு அர்ஜுன் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது. அதன் அடிப்படையில் இன்று (டிசம்பர் 24) காலை 11 மணியளவில் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகி உள்ளார். இதைத் தொடர்ந்து அல்லு அர்ஜுனிடம் விசாரணை நடந்தது தொடர்பான அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- Advertisement -