Homeசெய்திகள்சினிமாதந்தைக்கு அஞ்சலி செலுத்திய மகள்.. 3 மணி அளவில் நடிகர் ராஜேஷின் உடல் நல்லடக்கம்...

தந்தைக்கு அஞ்சலி செலுத்திய மகள்.. 3 மணி அளவில் நடிகர் ராஜேஷின் உடல் நல்லடக்கம்…

-

- Advertisement -

மறைந்த மூத்த நடிகர் ராஜேஷின் மகள் திவ்யா கனடாவில் இருந்து சென்னை திரும்பி அஞ்சலி செலுத்தினார்.தந்தைக்கு அஞ்சலி செலுத்திய மகள்.. 3 மணி அளவில் நடிகா் ராஜேஷின் உடல் நல்லடக்கம்...தமிழ் திரையுலகில் குணசித்திர நடிகர்களில் மிக முக்கியமானவர் நடிகர் ராஜேஷ் இவர் 1970களில் தொடங்கி இப்போது வரை நடித்து வந்துள்ளார். இவர் தமிழில் மட்டும் இதுவரை 150-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டும் இன்றி மலையாளம் தெலுங்கு ஆகிய மொழிகளும் நடித்துள்ளார். இவர் கடைசியாக 2024 ஆம் ஆண்டு வெளியான மேரி கிறிஸ்மஸ் திரைப்படத்தில் விஜய் சேதுபதியுடன் நடித்திருந்தார். நடிகராக மட்டுமின்றி டப்பிங் கலைஞராகவும் பல்வேறு நடிகர்களுக்கு குரல் கொடுத்தவர் ராஜேஷ். சினிமா மட்டுமல்லாமல் தொலைக்காட்சியை தொடரிலும் நடித்தார். மேலும் இவர் சமீப காலமாக யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வந்து பல புத்தகங்களையும் எழுதி உள்ளார்.தந்தைக்கு அஞ்சலி செலுத்திய மகள்.. 3 மணி அளவில் நடிகா் ராஜேஷின் உடல் நல்லடக்கம்...இதற்கிடையே உடல்நிலை குறைவு காரணமாக அவ்வப்போது சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர் உடல்நிலை குறைவால் நேற்று முன்தினம் காலமானார். இவரது மனைவி கடந்த 2012 ஆம் ஆண்டு காலமானார். மேலும் இவரது மகன் தீபக் இவருடன் இருந்து திரைத் துறையில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இவரது மகள் திவ்யா திருமணம் ஆகி கனடாவில் வசித்து வந்துள்ளார். தந்தை இறந்த துக்கம் தாங்காமல் மகள் திவ்யா கனடாவிலpருந்து புறப்பட்டு சென்னை ராமாபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் இறுதி சடங்கில் கலந்து கொள்ள இன்று அதிகாலை வந்துள்ளார். இதனை அடுத்து இன்று மதியம் ஒரு மணி அளவில் அசோக் நகரில் உள்ள வெற்றி சிலுவை ஆலயத்தில் பிரார்த்தனைகள் முடிந்த பின் மாலை 3 மணி அளவில் கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில் நல்லடக்கம் செய்ய உள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

அரசுப்பள்ளிகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப…பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!

MUST READ