
வங்க கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக உருவான மிக்ஜாம் புயலானது சென்னை மட்டுமல்லாமல் திருவள்ளூர், காஞ்சிபுரம் போன்ற கடலோர மாவட்டங்களை பந்தாடி வருகிறது. குறிப்பாக சென்னை முழுவதும் வெள்ளத்தில் தத்தளித்து கொண்டிருக்கிறது. இதனால் வீடுகளில், மருத்துவமனைகளில் வெள்ளம் சூழ்ந்து பெரும்பாலான மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் சிரமத்துக்குள்ளாகியுள்ளது. ஒரு பக்கம் வெள்ளத்தில் சிக்கிய ஆயிரக்கணக்கான மக்களை மீட்பதற்காக மீட்பு படையினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். மறுபக்கம் நடிகர் விஷால் தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு மேயர் முதல் எம்எல்ஏக்கள் வரை அனைத்து அரசு அதிகாரிகளையும் லெப்ட் ரைட் வாங்கியுள்ளார். அந்த வீடியோவில் அவர் பேசியதாவது, “இப்போது ஏற்பட்டுள்ள புயல் மழையினால் முதலில் மின்சாரம் துண்டிக்கப்படும் அடுத்தது வெள்ளம் வீட்டிற்குள் வரும். நான் அண்ணா நகரில் இருக்கிறேன் எங்கள் ஏரியாவிலும் அப்படி தான். இங்கேயே இப்படின்னா மற்ற இடங்களில் நினைத்து பார்க்க முடியவில்லை.
2015ல் வெள்ளம் வரும் சமயத்தில் எல்லோரும் இறங்கி வேலை செய்து, முடிந்த அளவுக்கு பழைய நிலைமைக்கு கொண்டு வந்தோம். இன்னும் எட்டு வருடங்கள் கழித்து மிகவும் மோசமான நிலைமை ஏற்பட்டுள்ளது என்பதை நினைக்கும் போது கேள்வி எழுகிறது. மழைநீர் வடிகால் திட்டத்தை சென்னை கார்ப்பரேஷன் அறிவித்திருந்தது அந்த திட்டம் எங்கே போனது? எங்கே ஆரம்பித்தது? எங்கே முடிந்தது?.
Dear Ms Priya Rajan (Mayor of Chennai) and to one & all other officers of Greater Chennai Corporation including the Commissioner. Hope you all are safe & sound with your families & water especially drainage water not entering your houses & most importantly hope you have… pic.twitter.com/pqkiaAo6va
— Vishal (@VishalKOfficial) December 4, 2023
நான் இதை ஒரு நடிகனாக கேட்கவில்லை வாக்காளனாக கேட்கிறேன். எம்எல்ஏக்கள் முதலில் அவங்க அவங்க ஏரியாவில் இருக்கும் மக்களுக்கு வெளியே வந்து உதவுங்கள். அப்போதுதான் மக்களுக்கு தன்னம்பிக்கை கிடைக்கும். எட்டு வருடங்கள் கழித்தும் இந்த மழைக்கு சென்னை முழுவதும் மழை நீர் தேங்கி இருப்பது மிகவும் கேவலமான ஒரு விஷயமாக இருக்கிறது. இந்த பதிவு மிகவும் முக்கியமானது. நாம் எதுக்காக எதற்காக வரி கட்டுகிறோம் என்று கேள்வி கேட்க வைத்து விடாதீர்கள். உங்கள் தொகுதியில் இருக்கும் மக்கள் யாராவது உதவுவார்கள் என எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள்” என்று பேசியுள்ளார்.