spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்பார் உரிமையாளர் வீட்டில் 50 சவரன் நகை, 60 லட்சம் பணம் கொள்ளை..

பார் உரிமையாளர் வீட்டில் 50 சவரன் நகை, 60 லட்சம் பணம் கொள்ளை..

-

- Advertisement -

பார் உரிமையாளர் வீட்டில் 50 சவரன் நகை, 60 லட்சம் பணம் கொள்ளை..

சென்னை அம்பத்தூர் ஞானமூர்த்தி நகர் விட்டால் தெருவை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 40). இவர் அம்பத்தூரில் 2 டாஸ்மார்க் பார்களை நடத்தி வருகிறார்.

பார் உரிமையாளர் வீட்டில் 50 சவரன் நகை, 60 லட்சம் பணம் கொள்ளை..

we-r-hiring

இந்நிலையில் இவர் உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக கடந்த 16ஆம் தேதி காலை தனது சொந்த ஊரான தஞ்சாவூருக்கு சென்றிருந்தார். பின்னர் அங்கிருந்து வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் வெளிப்புற கதவு உடைக்கப்பட்டு இருந்துள்ளது.

பார் உரிமையாளர் வீட்டில் 50 சவரன் நகை, 60 லட்சம் பணம் கொள்ளை..

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது தனது பீரோ லாக்கரில் வைத்திருந்த 50 சவரன் தங்க நகை, 60 லட்சம் ரொக்க பணம், 1 லட்சம் மதிப்புள்ள விலை உயர்ந்த வாட்ச் ஒன்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

பார் உரிமையாளர் வீட்டில் 50 சவரன் நகை, 60 லட்சம் பணம் கொள்ளை..

இதனையடுத்து அம்பத்தூர் காவல் நிலையத்தில் ராஜேஷ் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த குற்றப்பிரிவு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

MUST READ