போடியில் போலி தங்கமுலாம் பூசப்பட்ட 15 பவுன் நகையை அடகு வைக்க முயன்ற போது அடகு கடை உரிமையாளர் போலியான நகை என தெரிந்ததும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
ஐந்து குற்றவாளிகளை கைது செய்துள்ளனர். மேலும் தப்பி ஓடிய மூன்று பேரை தேடி வருகின்றனர்.
போடி பரமசிவன் கோவில் தெருவில் -சேகர் என்பவர் அடகு கடை மற்றும் நகை கடை நடத்தி வருகிறார்.
நேற்று 15 பவுன் எடையுள்ள தங்கமூலாம் பூசப்பட்ட போலி நகைகளை எடுத்து கொண்டு திண்டுக்கல்லை சேர்ந்த சதீஸ்வரன் தேனி பாலாபட்டியைச் சேர்ந்த கவின் தேவ் மற்றும் தினேஷ், தேனி உப்பு கோட்டையைச் சேர்ந்த சிவானந்தம், கம்பம் கூடலூரை சேர்ந்த சிலம்பரசன் ஆகியோர் காரில் வந்து நகைக்கடை முன்பு காரை நிறுத்தி விட்டு அடகு கடையில் 15 பவுன் எடையுள்ள போலி நகைகளை அடகு வைக்க சென்றுள்ளனர். அப்போது கடையில் இருந்த கடை உரிமையாளர் சேகர் நகையை சோதனை செய்தபோது அனைத்தும் போலி நகை என தெரியவந்தது.
உடனடியாக சுதாரித்துக் கொண்ட கடை உரிமையாளர் செல்போன் மூலம் நகர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலை அறிந்த காவல்துறையினர் குற்றவாளியை பிடிக்க முயன்ற போது காரில் தப்ப முயன்றுள்ளார். அப்போது காரை மடக்கிப்பிடித்தனர். காரில்இருந்த ஒருவர் காரை விட்டு இறங்கி அருகியுள்ள சந்தில் – ஓட முயன்ற போது காவலர் விரட்டிச் சென்று குற்றவாளியை பிடித்துள்ளனர். 5 பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை செய்துள்ளனர்.
மேலும் போடி பகுதியில் எந்தெந்த கடையில் இதுபோன்ற நகைகளை அடகு வைத்துள்ளனர் என்பதை பாலார்பட்டியை சேர்ந்தவரை அழைத்துச் சென்றபோது இடையில் காரின் கதவை திறந்து கொண்டு குற்றவாளி காரில் இருந்து தப்பி ஓடினார். அவரை இரண்டு காவலர்கள் விரட்டி சென்று பிடித்து மீண்டும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக குற்றவாளிடம் தொடர்ந்து விசாரணை செய்ததில் போடிப் பகுதிகளில் பல்வேறு அடகு கடையிலும் போலி நகைகளை அடகு வைத்ததாக ஒப்புக்கொண்டுள்ளனர்.
ஆணவக் கொலை செய்தவர்கள் மீது உட்சபட்ச தண்டனை அளிக்க வேண்டும் – எம். எச். ஜவாஹிருல்லா
இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து ஐந்து பேரை கைது செய்து அவர்கள் பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இதற்கு உடந்தையாக இருந்து தப்பி ஓடிய மூன்று பேரை தேடி வருகின்றனர். இச்சம்பவம் போடி நகைக்கடை பஜாரில் கடந்த இரு தினங்களாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.