போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஶ்ரீகாந்த் கைதான நிலையில், சென்னையில் உள்ள பார் மற்றும் மதுபானகூடங்களை காவல் துறையினா் தீவிரமாக கண்காணித்து வருகின்றனா்.போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஶ்ரீகாந்த் கைதான நிலையில் அவருக்கு அதிமுக பிரமுகர் பிரசாத் போதைப்பொருள் கொடுத்தது காவல்துறை விசாரணையில் தெரியவந்தது. பிரசாத் ஏற்கெனவே கடந்த மாதம் நுங்கம்பாக்கம் பாரில் ஏற்பட்ட மோதலில் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் பலருக்கு போதைப்பொருள் கொடுத்ததாக வாக்குமூலம் கொடுத்து உள்ளார்.
எனவே சென்னையில் உள்ள மதுபான விடுதிகளை காவல்துறையினா் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். குறிப்பாக முக்கிய பிரமுகர்கள் வரக்கூடிய 12மதுபான விடுதிகளை நுண்ணறிவு போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மதுபான விடுதிகளில் சந்தேகத்திற்கு இடமான வகையில் வரும் நபர்கள் மற்றும் போதைப்பொருள் புழக்கத்தில் ஈடுபடுகிறார்களா என்பதை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.சென்னை பெருநகரில் போதை பொருட்களுக்கு எதிரான நடவடிக்கை போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு தனிப்படையினர், 12 காவல் மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டுள்ள துணை ஆணையாளர்கள் போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு சரக உதவி ஆணையர்கள் ஆய்வாளர்கள் கொண்ட தனிப்படைகள் ஒருங்கிணைந்து தொடர்ச்சியாக கண்காணித்து போதை பொருள் குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்து உரிய சட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

மேலும் சென்னை எழும்பூர் நுங்கம்பாக்கம் கீழ்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் உள்ள மதுபானக் கூடங்களில் போதைப் பொருள் புழக்கம் உள்ளதா மாணவர்கள் யாரெனும் போதைப்பொருள் பயன்படுத்துகிறார்களா என்பதை காவல்துறை கண்காணித்து வருகின்றனர்.
ஈரானிடம் கெஞ்சும் டிரம்ப்! இஸ்ரேல் பதறுவது ஏன்? பொன்ராஜ் நேர்காணல்!