spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மே-13ம் தேதி தீர்ப்பு

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மே-13ம் தேதி தீர்ப்பு

-

- Advertisement -

பாலியல் வன்கொடுமை வழக்கில் திட்டமிட்டப்படி மே-13ம் தேதி தீர்ப்பு வழங்குவதில் சிக்கல் எதுவும் இல்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மே-13ம் தேதி தீர்ப்புபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரித்த கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவிக்கு அந்த வழக்கில் மே 13-ம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என அறிவித்திருந்தார்.  இதனிடையே, நீதிபதி நந்தினி தேவியை கரூர் மாவட்ட குடும்ப நல நீதிமன்றத்திற்கு மாற்றி தலைமைப் பதிவாளர் நேற்று உத்தரவு பிறப்பித்திருந்தார். இதனையடுத்து, இந்த வழக்கில் அறிவித்தப்படி தீர்ப்பு வழங்கப்படுமா? என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில், ஏற்கெனவே அறிவித்தபடி பொள்ளாச்சி வழக்கில் மே-13ம் தேதி தீர்ப்பு வழங்குவதில் எந்த சிக்கலும் இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. நீதிபதி பணியிடமாற்றம் தொடர்பாக நேற்றைய தினம் அறிவிப்பு மட்டுமே வெளியிடப்பட்டுள்ளதாகவும், அடுத்ததாக இது தொடர்பாக அரசாணை பிறப்பிக்கப்பட்ட பிறகே பணியிட மாற்றம் செய்யப்பட்ட நீதிபதி அந்த பொறுப்பை ஏற்க முடியும். மேலும், தற்போதைய பொறுப்பில் இருந்து அந்த நீதிபதி விடுவிக்கப்பட வேண்டும். இந்த நடைமுறைகளுக்கு சிறிது காலம் ஆகும் என்பதால், அறிவித்தப்படி பொள்ளாச்சி வழக்கில் மே 13ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

போலி தங்க பிஸ்கெட் மோசடி வழக்கில் இருவர் கைது!

we-r-hiring

MUST READ