- Advertisement -
தெலுங்கானாவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சாமியாரை காவலில் எடுத்து, விசாரிக்க தமிழக ரயில்வே போலீசார் முடிவு செய்துள்ளனா்.அம்பத்தூர், ஆவடி, அரக்கோணம் பகுதியில் கடந்த மாதம் ரயில் தண்டவாளங்களில் கற்களை வைத்து விபத்தை ஏற்படுத்த முயன்ற உத்தரகாண்டை சேர்ந்த சாமியார் ஓம் (46) என்பவரை தமிழக ரயில்வே போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், தெலுங்கானா மாநிலம், கச்சிகுடா அருகே சில தினங்களுக்கு முன்பு தண்டவாளத்தில் கற்களை வைத்த போது, கச்சிகுடா ரயில்வே போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அம்பத்தூர், ஆவடி, அரக்கோணம் பகுதியில் தண்டவாளத்தில் கற்களை வைத்து விபத்தை ஏற்படுத்த முயற்சித்த வழக்குகளில் இவரை கைது செய்த தமிழக ரயில்வே போலீசார் ஓரிரு தினங்களில் கச்சிகுடா விரைகின்றனர்.