Homeசெய்திகள்க்ரைம்ரூபாய். 94 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்

ரூபாய். 94 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்

-

சென்னை மண்ணடியில் இருசக்கர வாகனத்தில் உரிய ஆவணம் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரூபாய்.94 லட்சம் ஹவாலா பணத்தை போலீசார் பறிமுதல் செய்து வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.ரூபாய். 94 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்சென்னை பாரிமுனை மண்ணடி உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவு ஹவாலா பணம் பரிமாற்றம் நடைபெறுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இதனை தடுக்கும் பொருட்டு பூக்கடை துணை ஆணையர் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் மண்ணடி பகுதியில் சோதனை மேற்கொண்டு ஹவாலா பணம் கொண்டு வருபவர்களை கைது செய்து வருகிறார்கள்.

அதன் தொடர்ச்சியாக  பாரிமுனை அடுத்த வடக்கு கடற்கரை சாலை பகுதியில் வடக்கு கடற்கரை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரை சந்தேகத்தின் பேரில் மடக்கி சோதனை செய்தனர்.

சோதனையில் அவரிடம் உரிய ஆவணம் இன்றி ரூபாய். 94 லட்சம் பணம் இருப்பது தெரியவந்துள்ளது. அவர்களிடம் இருந்த பணத்தை பறிமுதல் செய்து அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில் மண்ணடி பகுதியைச் சேர்ந்த  முகமது இஸ்மாயில்  இவருடைய முதலாளி என்பதும் பணத்தை ஒருவரிடம் கொடுத்துவர அனுப்பியதாகவும் கூறியுள்ளார்.ரூபாய். 94 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்வடக்கு கடற்கரை போலீசார் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து அவர்களிடம் ஒப்படைத்துள்ளார்கள்.மேலும் பறிமுதல் செய்யப்பட்ட பணம் ஹவாலா பணம் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக வடக்கு கடற்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

MUST READ