spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்ஈரோட்டில் பிறந்து 50 நாட்களே ஆன பெண் குழந்தை விற்பனை...  5 பேரை பிடித்து விசாரணை!

ஈரோட்டில் பிறந்து 50 நாட்களே ஆன பெண் குழந்தை விற்பனை…  5 பேரை பிடித்து விசாரணை!

-

- Advertisement -

ஈரோட்டில் பிறந்து 50 நாட்களே ஆன பெண் குழந்தை விற்பனை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக குழந்தையின் தாய் உள்ளிட்ட 5 பேரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

we-r-hiring

ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதியை சேர்ந்தவர் நித்யா. இவர் தனது பிறந்து 50 நாட்களே ஆன பெண் குழந்தையை இடைத்தரகர்கள் உதவியுடன் கன்னியாகுமரியை சேர்ந்த தம்பதிக்கு ரூ. 4 லட்சத்துக்கு விற்பனை செய்ததாக புகார் எழுந்தது. அதன் பேரில், விசாரணை மேற்கொண்ட ஈரோடு மாவட்ட குழந்தைகள் நல அவலுவலர், இந்த விவகாரம் தொடர்பாக வீரப்பன்சந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் வீரப்பன் சத்திரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, குழந்தையின் தாய் நித்தியா, இடைத்தரகர்களாக செயல்பட்ட பானு, ராதாமணி, ரேவதி, செல்வி ஆகியோரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் நாகர்கோயில் தம்பதியினருக்கு குழந்தையை விற்பனை செய்தது தொடர்பாக நித்யாவின் ஆண் நண்பர் சந்தோஷ்குமார் என்பவரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

MUST READ