spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் கொலை – போலீஸ் விசாரணை

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் கொலை – போலீஸ் விசாரணை

-

- Advertisement -

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த பொங்கலூர் அருகே உள்ள சேமலைகவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தெய்வசிகாமணி.தனது தோட்டத்து வீட்டில் மனைவி அலமேலு என்கிற அலமாத்தாள் உடன் தனியாக தங்கி விவசாயம் செய்து வருகின்றனர்.ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று போ் கொலை – போலீஸ் விசாரணை

இவர்களது மகன் செந்தில்குமார் கோவையில் ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றி வரும் நிலையில் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கோவையில் தங்கி வருகிறார். தனது உறவினர் இல்ல நிகழ்ச்சிக்காக நேற்று செந்தில்குமார் தனது பெற்றோர் வீட்டுக்கு வந்துள்ளார். இரவு 3 பேரும் உறங்கி உள்ளனர் அப்போது தோட்டத்து பகுதியில் சப்தம் கேட்டதால் தெய்வசிகாமணி(76) முதலில் எழுந்து வெளியே சென்று பார்த்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த மர்ம நபர்கள் தெய்வசிகாமணியை வெட்டி கொலை செய்துள்ளனர்.

we-r-hiring

அதனை தொடர்ந்து வீட்டிற்குள் சென்ற மர்ம நபர்கள் கட்டிலில் படுத்து தூங்கிக் கொண்டிருந்த செந்தில் குமார்(45) மற்றும் அலமாத்தாள்(65) இருவரையும் கொடூரமாக வெட்டி கொலை செய்தனர்.அதனை அடுத்து இன்று காலை செந்தில்குமார் வரச்சொல்லியிருந்த சவரத்தொழிலாளி வீட்டில் வந்து பார்த்த போது மூவரும் பிணமாக கிடந்துள்ளனர்.ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று போ் கொலை – போலீஸ் விசாரணை

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக அவினாசிபாளையம் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்துள்ளார். தகவல் கிடைத்து சம்பவ இடம் வந்த பல்லடம் காவல் துறை கண்காணிப்பாளர் சுரேஷ் மற்றும் போலீசார் சடலங்களை திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர்.மேலும் வீட்டினுள் பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்துள்ளது.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று போ் கொலை – போலீஸ் விசாரணை

மேலும் சம்பவ இடத்திற்கு திருப்பூர் மாநகர காவல் ஆணையர் லட்சுமி சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டார். அவரிடம் செந்தில்குமாரின் மனைவி கதறி அழுதபடி தனது குழந்தைகளை நான் எப்படி பார்த்துக் கொள்வேன் உறங்கிக் கொண்டிருந்த கணவரை வெட்டி கொன்று விட்டனர். அவர்களை நிச்சயம் பிடிக்க வேண்டும் பிடிக்கவில்லை எனில் காவல்துறைக்கு கேவலம் என தனது ஆத்திரத்தை வெளிப்படுத்தி கதறி அழுதார்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று போ் கொலை – போலீஸ் விசாரணை

சம்பவ இடத்திற்கு வந்த தடயவியல் நிபுணர்கள் கைரேகைகளை சேகரித்தும் மோப்ப நாய் மூலம் தோட்டப்பகுதிகளில் தடயங்களை சேகரித்தும் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். முதல் கட்ட விசாரணையில் 8 பவுன் நகைகள் கொள்ளை போனது தெரியவந்துள்ளது. மேலும் பொருட்கள் கொள்ளை போயுள்ளதா எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை தாய் மகன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

பின்னர் திருப்பூர் மாநகர காவல் ஆணையாளர் லட்சுமி செய்தியாளர்களிடம் பேசுகையில் இந்த சம்பவம் ஒரு நபர் செய்திருக்க வாய்ப்பில்லை எனவும் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் 5 தனி படைகள் அமைத்து விசாரணை பல்வேறு கோணங்களில் நடைபெற்று வருகிறது எனவும் அனைத்து பகுதிகளிலும் வாகன சோதனை செய்யப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

ஆந்திரா : 8ம் வகுப்பு சிறுவன் கழுத்து அறுத்து கொலை

MUST READ