Homeசெய்திகள்இந்தியாசென்னையில் இரண்டாவது நாளாக விமான சேவை பாதிப்பு

சென்னையில் இரண்டாவது நாளாக விமான சேவை பாதிப்பு

-

- Advertisement -

சென்னையில் இரண்டாவது நாளாக விமான சேவை பாதிப்பு

சென்னை விமான நிலையத்தில், இரண்டாவது நாளாக 26 விமான சேவைகள் பாதிக்கப்பட்டு, பயணிகள் கடும் அவதிப்பட்டனர். சென்னையில் நள்ளிரவில், சூறைக்காற்று இடி மின்னலுடன் பெய்த பலத்த மழை காரணமாக இந்த சேவை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இரண்டாவது நாளாக, சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று நள்ளிரவில் பெய்த பலத்த மழை, இடி மின்னலுடன் கூடிய சூறைக்காற்று காரணமாக, மீண்டும் சென்னை விமான நிலையத்தில், இரண்டாவது நாளாக நேற்று நள்ளிரவில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.

மகனுடன் கிரிக்கெட் விளையாடும் தல அஜித் …..வைரலாகும் புகைப்படங்கள்!

கேரள மாநிலம் கோழிக்கோடு- ல் இருந்து 70 பயணிகளுடன் சென்னை உள்நாட்டு விமான நிலையத்துக்கு வந்து கொண்டிருந்த பயணிகள் விமானம் மற்றும் டெல்லியில் இருந்து 158 பயணிகளுடன் சென்னைக்கு வந்து கொண்டிருந்த பயணிகள் விமானம் ஆகிய இரண்டு விமானங்கள் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரமாக வானில் வட்ட மடி கொண்டிருந்தன. இவை இரண்டும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் என்பது குறிப்பிடத்தக்கது.அதன் பின்பு கோழிக்கோடு விமானம் திருச்சிக்கும், டெல்லி விமானம், பெங்களூர்க்கும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.

அதை போல் டெல்லி, மும்பை, வாரணாசி, கோவா, ஹைதராபாத், மதுரை, கோவை உள்ளிட்ட 10 விமானங்கள், சென்னையில் தரையிறங்க முடியாமல், நீண்ட நேரம் வானில் வட்டமடித்து பறந்து தத்தளித்தன. அதன் பின்பு மழை, சூறைக் காற்று, இடி மின்னல் வேகம் குறைந்த பின்னர், இந்த விமானங்கள் ஒன்றன்பின் ஒன்றாக, சென்னையில் தரை இறங்கியுள்ளன.

அதை போல் சென்னையில் இருந்து புறப்பட வேண்டியது விமானங்களான துபாய், குவைத், சிங்கப்பூர், கோலாலம்பூர், அபுதாபி, பாங்காக், டெல்லி, ஜெய்ப்பூர், ஹைதராபாத், பெங்களூர், திருவனந்தபுரம் உள்ளிட்ட 14 விமானங்கள் இடி மின்னல் சூறைக்காற்று வேகம் குறைந்த பின்பு, தாமதமாக சென்னையில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளது.

மேலும் இரண்டு விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல் பெங்களூர், திருச்சிக்கு திரும்பிச் சென்றதோடு,10 வருகை விமானங்கள், 14 புறப்பாடு விமானங்கள் தாமதம் ஆகி, 26 விமானங்களின் சேவைகள் பாதிக்கப்பட்டதால், சென்னை விமான நிலையத்தில் பயணிகள் கடும் அவதிப்பட்டுள்ளனர்.

MUST READ