விவிபேட் தொடர்பான வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.
மோசமான பீல்டிங் காரணமாக தோல்வியைத் தழுவிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி!
100% ஒப்புகைச் சீட்டுடன் வாக்குகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தனர். இந்த வழக்குகளை உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கன்னா, தீபாங்கர் தத்தா அமர்வு விசாரித்தது.
அப்போது நீதிபதிகள் விவிபேட் தொடர்பாக எங்களுக்கு சில கேள்விகள் இருப்பதாகவும், தேர்தல் ஆணைய அதிகாரி இன்று (ஏப்ரல் 24) மதியம் 02.00 மணிக்கு உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
அதன்படி, மைக்ரோ சிப் தொடர்பாக, நீதிபதிகளின் சந்தேகங்களுக்கு ஆணையர் தரப்பில் பதில் தரப்பட்டது. அதில், மின்னணு வாக்கு இயந்திரத்தில் உள்ள புரோகிராம்களை மாற்ற இயலாது எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், தேர்தல்களில் முறைகேடு நடந்ததாக இதுவரை எந்த ஆதாரமும் தரப்படவில்லை. ஒரு அரசியல் அமைப்பான நீதிமன்றம் இன்னொரு அரசியல் அமைப்பான ஆணையத்தை எப்படி கட்டுப்படுத்துவது? தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்களில் ஆணையம் கூறும் தகவல்களை ஏற்கத்தான் வேண்டும். அனைத்து சந்தேகங்களுக்கும் பதில் கிடைத்துள்ளது; தீர்ப்பு பின்னர் வழங்கப்படும்” என்று கூறி, வழக்கின் மீதான தீர்ப்பை ஒத்திவைத்துள்ளனர்.
லக்னோ அணியை பழி தீர்க்குமா சென்னை சூப்பர் கிங்ஸ் அணி?
தேர்தல் ஆணையத்தின் விளக்கம் மற்றும் மனுதாரர் தரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.