Homeசெய்திகள்அரசியல்டாக்டர் ராமதாஸின் சமூக நீதி வேடிக்கையானது - அமைச்சர் பொன்முடி

டாக்டர் ராமதாஸின் சமூக நீதி வேடிக்கையானது – அமைச்சர் பொன்முடி

-

- Advertisement -

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பாஜகவுடன் சேர்ந்துக் கொண்டு சமூக நீதிப் பற்றி பேசுவது வேடிக்கையாக இருக்கிறது என்று அமைச்சர் பொன்முடி பேசியுள்ளார்.டாக்டர் ராமதாஸின் சமூக நீதி வேடிக்கையானது - அமைச்சர் பொன்முடி விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஜூலை 10 தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தல் நியாயமாக நடைபெறாது என்று  அதிமுக இடைத் தேர்தலை புறக்கணித்துள்ளது. திமுக, பாமக மற்றும் நாம் தமிழர் கட்சி என்று மும்முனைப் போட்டி நிலவுகிறது.

இந்நிலையில் விக்கிரவாண்டி அருகே கொசப்பாளையம் கிராமத்தில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர் கலந்து கொண்டனர்.

https://www.apcnewstamil.com/news/tamilnadu-news/anbumani-ramadoss-condemns-dmk-for-sand-theft/93164

கூட்டத்தில் அமைச்சர் ஏ.வ.வேலு பேசும் போது, இந்த தேர்தலில் வெற்றிப்பெற்றவுடன் அன்னியூர் சிவாவின் கோரிக்கையை முழுமையாக நிறைவேற்றி தருவேன் என்று கூறியுள்ளார். அவரை தொடர்ந்து பேசிய அமைச்சர் பொன்முடி, திமுகவை பார்த்து பயந்து இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடவில்லை என தெரிவித்தார்.டாக்டர் ராமதாஸின் சமூக நீதி வேடிக்கையானது - அமைச்சர் பொன்முடி மேலும் அதிமுகவினர் ஒருபோதும் பாஜக கூட்டணிக்கு வாக்களிக்க மாட்டார்கள். திமுகவிற்கு தான் வாக்களிப்பார்கள் என்று கூறினார். சமூக நீதிக்கு எதிரான கட்சி பாஜக அந்த கட்சியுடன் ராமதாஸ் கூட்டணி வைத்துக் கொண்டு சமூக நீதி குறித்து பேசுவது வேடிக்கையாக இருக்கிறது என்று அமைச்சர் பொன்முடி கூறியிருந்தார்.

எனவே இந்த தேர்தலில் திமுக பெரும்பான்மை வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் என தெரிவித்துள்ளார்.

MUST READ